Wednesday, February 05, 2014
எச்சூர் கோவில் Echoor Village Temple - Sunguvarchatram Sriperumbudur
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Wednesday, February 05, 2014
No comments:


Tuesday, February 04, 2014
Maasi - Vijaya - Edition - மாசி மாத மடல்
மாசி மாத மடல்
மாசி மாத சுபநாட்கள்
![]() |
Maha Shivarathiri - 2014 மகா சிவராத்திரி - மாசி மாத மடல் |
மாசி மாத சுபநாட்கள்
மாசி மாத கிரஹப்பிரவேஸ நாட்கள்
மாசி மாத பூமி பூஜை (வாஸ்து பூஜை) நாட்கள்
கிணறு எடுக்க நல்ல நாள்
முடி இறக்கம், காதணி உகந்த நாள்
காரடையான் நோன்பு நாள்
சுப முகூர்த்த நாள்
மாலை நேர சுபதினங்கள்
நிச்சிய தாம்பூல நாள்
தலைவாசல் நிறுத்த நாள்
மகா பிரதோஷம், மஹா சிவராத்திரி, மாத பிறப்பு மற்றும் இன்னும் பல தகவல்களுடன்......!
Jaya Varusha Panchangam Download
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Tuesday, February 04, 2014
No comments:


Labels:
Echoor,
Maasi Auspicious Dates,
Maga,
Maha Shivarathiri,
Panchangam,
Raasi Palan,
Sivarathri,
Suba Dinam,
Tamil,
சிவராத்திரி,
மாசி
Monday, February 03, 2014
காரடையான் நோன்பு வழிபாடு நேரம் 2014 Karadayan Nonbu
காரடையான் நோன்பு வழிபாடு நேரம் - உகந்த நேரம் - நோன்பு நோற்கும் நேரம் 14 .3.2014
Karudayan Nombu, Karadayan Nonbu, Panguni, Maasi, காருடையான் நோன்பு
காரடையான் நோன்பு :
உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்
ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்
என்று எமனை வேண்டிநோன்புக் கயிறு கட்டிக்கொள்ளவேண்டும்
![]() |
Karadayan Nonbu காரடையான் நோன்பு வழிபாடு நேரம் - உகந்த நேரம் 2014 |
காரடையான் நோன்பு :
உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்
ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்
என்று எமனை வேண்டிநோன்புக் கயிறு கட்டிக்கொள்ளவேண்டும்
தானம்: அன்று காலை எருமைக்கு அரிசி தவிடு (அ) கோதுமை தவிடு 2 கிலோ, வெல்லம் 250 கிராம் கலந்து எருமைக்கு தானம் செய்யவேண்டும்
இந்த நோன்பு சுமங்கலிகளுக்கு தீர்க்க சௌமங்கல்யத்தை அளிப்பதற்காக
ஏற்பட்டது. தேவியை பிரார்த்தனை செய்து படத்தின் முன்னால் சிறிது இலை/
தட்டு வைத்து, அதில் அடை சிறிது வெண்ணை, வெற்றிலைப் பாக்கு மஞ்சள்
கயிறுகளையும் அதில் வைத்து விட வேண்டும். பிறகு கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச்சொல்லி பிரார்த்தனை செய்து ஒரு கயிற்றை அம்பாளின் படத்திற்கு சாத்திவிட்டு மற்றதைத் தான் அணிய வேண்டும். பிறகு அம்பாளுக்கு நைவேத்யம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை முடிக்க வேண்டும்.
மஞ்சள் கயிற்றை கட்டிக் கொள்ளும்பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.
தோரம் கிருஷ்ணாமி சுபகே ஸஹாரித்ரம்
தராமி அஹம்!பர்த்து:ஆயுஷ்ய
ஸித்யர்த்தம் ஸுப்ரீதாபவ ஸர்வதா
ஒரு ஸமயம் சத்யவான் என்னும் ராஜா கல்யாணமான சில
வருஷங்களுக்குள் இறந்துபோக நேரிடுகிறது. அப்பொழுது தன் கணவனுடைய உயிர் இங்கேயே இருக்கும்படி செய்து, எமனுடைய ஆசீர்வாதத்தால் சென்ற உயிரை மீட்டுவந்த நினைவே, காரடையான்நோன்பு. பொதுவாக உமா மகேஸ்வரர், லக்ஷ்மிநாராயணன், என்று அம்மை பெயருடன்தான், ரிஷிகள் ஸ்வாமி பெயர்கள் வரும். இங்கே சத்யவான் சாவித்திரி என்று சத்யவான் முன்பாகவும் சாவித்திரி இரண்டவதாகவும் சொல்லப்படுகிறது. கணவனே மாதா, பிதா, பதி தெய்வம் என எல்லா வகையிலும் கணவனுக்கு முக்யத்துவம் கொடுத்து, அவன் வாழ்வே தன்
வாழ்வு என நினைத்து, கணவன் வாழ்வுக்காக, கணவனை எமன் எங்கெல்லாம் இட்டுச் சென்றானோ அங்கெல்லாம் தன் தவவலிமையால் சென்று, எத்தனையோ பல வகையான வரங்கள் தருகிறேன் என்று சொன்னாலும் ஒரு வரனிலும் விருப்பமில்லாமல், கணவன் மீண்டும் வரவேண்டும் என ஒரே வரத்தோடு கணவனை மீட்டு வந்த காரிகை சாவித்ரி. ஆகவேதான் சத்யவான் சாவித்ரி என்று சொல்வார்கள். பொதுவாக இல்லறத்தில் கணவன் மனைவி இருவருமே பொதுக்காரியங்களில் ஒத்துப்போகவேண்டியதாக இருந்தாலும் கணவனுடைய ஆபத்து காலத்தில் அவன் பிரிந்து விட்டால் என்ன ஆகுமோ என்று பயந்து போய் விடுவார்கள் பிற்காலத்தில் தனக்கு வேண்டிய பொருள்களை சேகரித்து வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். இது உலக நியதி. இதற்கு விதிவிலக்காக பலரும் உண்டு. குந்தியின் கணவன் பாண்டு இறந்தவுடன் மாத்ரி என்ற மற்றொரு மனைவி இறந்து விடுகிறாள். அப்போது குந்திதேவி கணவனோடு உயிர்த்தியாகம் செய்யாமல், சாபத்தினால் உயிர் போவதை தடுக்க முடியாமல் போனதால் கணவன் சொல்படி ஐந்து குழந்தைகளை காப்பதில் ஈடுபட்டாள். மாத்ரி போல் குந்தியும் கணவனோடு உயிர்விட்டிருந்தாலும், அல்லது குந்தியின் வரபலத்தால் சூரியன் வந்தது போல் யமனை வரவழைத்து பாண்டுவின் உயிரை காப்பாற்றியிருந்தாலும்,
ரிஷிகளின் சாபப்படியும், மகபாராதத்தில் நடந்த தெய்வீக ஸங்கல்ப்பப் படியும்,
எமனால் கூட பாண்டுவின் மரணத்தை தவிர்க்க முடியாது. ஆகவேதான்
அத்தனை வலிமையுள்ளவளாக இருந்தும் அவதியின் பலத்தோடு மகாபாரத
நிகழ்ச்சிக்கு உறுதுணையாக பஞ்ச பாண்டவர்களை காப்பாற்றினாள்.
இதுபோலத்தான் காந்தாரியும் கணவன் பார்க்காததை தானும் பார்க்க மாட்டேன் என்று தன் கண்களையே கட்டிக் கொண்டு வாழ்ந்தாள். இப்படி சிலர்
கணவனுக்காக வாழ்ந்தாலும் சாவித்ரி போல் விதியின் பலத்தையும் மாற்றி
கணவனோடு வாழ்நாள் முழுவதும் சுமங்கலியாக வாழும் பாக்யத்தை பெற்றவள் சாவித்ரி.
ஆகவே காரடையான் நோன்பின் தத்துவம் கணவனோடு எப்பொழுதும்
சுமங்கிலியாக வாழவேண்டும் என்பதுதான்.
தகவல் : காஞ்சி மடம்
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Monday, February 03, 2014
No comments:


Saturday, February 01, 2014
Echoor Sri Sivan Temple - Pradosham & Sivarathiri 2014
Echoor Sri Sivan Temple - Pradosham & Sivarathiri
மஹா பிரதோஷம் - மஹா சிவராத்திரி பூஜை 2014
மஹா சிவராத்திரி - Maha Pradosham, Maha Sivarathiri 2014 Echoor
எச்சூர் (சுங்குவார்சத்திரம்) கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் மரகதம்மாள் உடனுறை ஸ்ரீமார்கண்டேயருக்கு விஜய வருடம், மாசி மாதம் 15ம் நாள், (27.2.2014) வியாழன் கிழமை, மாக பகுளம் திரியோதசி மற்றும் சதுர்தசி உள்ள அன்று மாலை மஹா பிரதோஷமும், இரவு மஹா சிவராத்திரி அபிஷேக பூஜையும் நடைபெறும்.
வழி:
சுங்குவார்சத்திரத்தில் இருந்து 6 கி.மி (வாலாஜாபாத் சாலையில்)
தொடர்பு எண் 9965647595, 9841913559
மஹா பிரதோஷம் - மஹா சிவராத்திரி பூஜை 2014
![]() |
Maha Shivarathiri 2014 மகாசிவராத்திரி 2014 |
மஹா சிவராத்திரி - Maha Pradosham, Maha Sivarathiri 2014 Echoor
எச்சூர் (சுங்குவார்சத்திரம்) கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் மரகதம்மாள் உடனுறை ஸ்ரீமார்கண்டேயருக்கு விஜய வருடம், மாசி மாதம் 15ம் நாள், (27.2.2014) வியாழன் கிழமை, மாக பகுளம் திரியோதசி மற்றும் சதுர்தசி உள்ள அன்று மாலை மஹா பிரதோஷமும், இரவு மஹா சிவராத்திரி அபிஷேக பூஜையும் நடைபெறும்.
வழி:
சுங்குவார்சத்திரத்தில் இருந்து 6 கி.மி (வாலாஜாபாத் சாலையில்)
தொடர்பு எண் 9965647595, 9841913559
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Saturday, February 01, 2014
No comments:


Labels:
Echoor,
Maha Shivarathiri,
Pradosham,
Sunguvarchatram,
எச்சூர்,
வல்லக்கோட்டை
வல்லக்கோட்டை ஜோதிடர் - Vallakottai Astrologer
வல்லக்கோட்டை ஜோதிடர் - Vallakottai Astrologer
![]() |
வல்லக்கோட்டை ஜோதிடர் -Vallakotai Astrologer |
![]() |
வல்லக்கோட்டை ஜோதிடர் -Vallakotai Astrologer |
ஸ்ரீ. சம்பத் பட்டாச்சாரியார்
ஜோதிடர்
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் அர்ச்சகர்
ஸ்ரீவல்லக்கோட்டை முருகன் திருக்கோவில் அருகில்
95242 88609 & 94440 37085
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Saturday, February 01, 2014
No comments:


Labels:
Archagar,
Astrologer,
Mathur,
Oragadam,
Padapai,
Sipcot,
Vallakottai,
ஜோதிடர்
Wednesday, January 29, 2014
நேரம் என்னும் அலகு இந்த பிரபஞ்சம் தோன்றும் வரை இல்லை!
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Wednesday, January 29, 2014
No comments:


Labels:
Chrompet Pallavaram Astrologer,
Guru Peyarchi 2014,
Jaya Varusha Panchangam,
progithar,
prohithar,
Raasi Palan,
Sani Peyarchi,
Tamil Year,
Time,
www.prohithar.com,
www.thanigaipanchangam.com
திதி கணிப்பது எப்படி
திதி என்பது இந்திய வானசாஸ்திரத்தில் சந்திரன் ஒளி தேய்ந்து வளரும் கால அளவில் 12பாகைகளை குறிக்கிறது.
சந்திரனின் திதி(சந்திர நாள்) சந்திரனின் ஒளிர்வு நிலையிலிருந்து வேறுபட்டதாகும். சந்திரனின் ஒளியை பூமியில் இருந்து பார்க்கும் பொழுது இடத்திற்கு இடம் சிறிது வேறுபடும். ஆனால் திதி அளவு என்பது புவி மையம், சந்திர மையம், சூரிய மையம் இடையிலான அளவீடாகும்.
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Wednesday, January 29, 2014
No comments:


பூமிக்கு இரண்டு நிலவுகள் ?
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Wednesday, January 29, 2014
No comments:


மேற்கில் உதிக்கும் சூரியன்
![]() |
மேற்கில் உதிக்கும் சூரியன்- திசை என்று எதுவும் இல்லை |
இந்த பிரபஞ்சம் விரிவடைந்துக்கொண்டே இருக்கும் , அனைத்து வானியல் பொருள்களும் தன் இடத்தை விட்டு நகர்கிறது. உள்ளிருக்கும் எந்த ஒரு வானியல் பொருளுக்கும் திசை என்று எதுவும் இல்லை. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் நிரந்தரமல்ல....! திசை என்று எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை !!!!!
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Wednesday, January 29, 2014
No comments:


ஆறாம் அறிவும் - ஐம்புல வழிபாடும்
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Wednesday, January 29, 2014
No comments:


Tuesday, January 28, 2014
திருமண தகவல் படிவம்
![]() |
திருமண தகவல் படிவம் - தமிழில், Matrimonial Form in Tamil
|
திருமண தகவல் படிவம் - தமிழில்
Matrimonial Form in Tamil
Download - தறவிறக்கம்
http://www.prohithar.com/downloads/matrimonial_form_tamil.pdf
www.prohithar.com
www.thanigaipanchangam.com
http://www.prohithar.com/downloads/matrimonial_form_tamil.pdf
www.prohithar.com
www.thanigaipanchangam.com
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Tuesday, January 28, 2014
No comments:


Labels:
Matrimonial Form in Tamil,
sri thanigai Panchangam,
Tambaram Astrologer,
www.prohithar.com,
திருமண தகவல் படிவம்
தை அமாவாசை வழிபாடும் தர்மமும்
![]() |
Thai amavasai தை அமாவாசை தர்பணம் மூதாதையர் வழிபாடு |
30.1.2014 வியாழன் கிழமை தை அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு வழிபாடு செய்ய மிகவும் உகந்தநாளாகும்.
அன்று தர்பணம் செய்வது எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு தானம், தர்மம் செய்வதும் மிக முக்கியமாகும்.
காலையில் பசுவிற்கு கோதுமை தவிடு, வெல்லம், அகத்திகீரை (இலைமட்டும்) கலந்து ஊறவைத்து தானம் செய்தும், ஆதறவற்றோர் இல்லத்தில் அரிசி, நல்லெண்ணைய், மளிகை பொருள், காய்கறிகள் தானம் செய்வதும் மிகவும் புன்னியத்தை தரும்.
தானம் இல்லாத வழிபாடு பலனற்றது
தணிகை பஞ்சாங்கம் பாலு சரவண சர்மா
www.prohithar.com
www.thanigaipanchangam.com
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Tuesday, January 28, 2014
No comments:


Friday, January 10, 2014
தை பொங்கல் வழிபாடு - உகந்த நல்ல நேரம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் வழிபாடு நேரம்
http://www.thanigaipanchangam.com
சூரியன் நிராயண (Sidereal) முறைப்படி தனூர் இராசியில் இருந்து மகர இராசிக்கு 270° பாகைக்கு (உத்திராடம் 1ல் இருந்து 2ல்) பிரவேசிக்கும் காலமே உத்திராயணம், தைமாத பிறப்பு, மகர சங்கரமணம் என்று வழிபடப்படுகிறது
14.1.2014 செவ்வாய் தை மாத பிறப்பு அன்று சூரியன் மகரத்தில் பகல் 1:13 மணி அளவில் பிரவேசிக்கிறார் அதன் பின்னர் 1:42 வரை அஷ்டம சுத்தியுடன் சூரிய துவக்க புள்ளி இராசியான மேஷ இராசியில் பொங்கல் வழிபாடு நன்று
பொங்கல் வழிபாடு நேரம்
http://www.thanigaipanchangam.com
சூரியன் நிராயண (Sidereal) முறைப்படி தனூர் இராசியில் இருந்து மகர இராசிக்கு 270° பாகைக்கு (உத்திராடம் 1ல் இருந்து 2ல்) பிரவேசிக்கும் காலமே உத்திராயணம், தைமாத பிறப்பு, மகர சங்கரமணம் என்று வழிபடப்படுகிறது
14.1.2014 செவ்வாய் தை மாத பிறப்பு அன்று சூரியன் மகரத்தில் பகல் 1:13 மணி அளவில் பிரவேசிக்கிறார் அதன் பின்னர் 1:42 வரை அஷ்டம சுத்தியுடன் சூரிய துவக்க புள்ளி இராசியான மேஷ இராசியில் பொங்கல் வழிபாடு நன்று
![]() |
Pongal Pooja Time - பொங்கல் வழிபாடு - படையல் உகந்த நேரம் |
Tuesday, December 24, 2013
இலவச ஜய வருட பஞ்சாங்கம் - Free Jaya Varusha Tamil Panchangam
இலவசமாக மின்புத்தக வடிவில்
ஸ்ரீ ஜய வருட (2014-2015) திருக்கணித பஞ்சாங்கம்
தறவிறக்கம் செய்ய
Free PDF Tamil Panchangam for Jaya Varusham
Download
http://www.thanigaipanchangam.com
or
http://www.prohithar.com/jaya/index.php
Sri Thanigai Panchangam
ஸ்ரீ ஜய வருட (2014-2015) திருக்கணித பஞ்சாங்கம்
தறவிறக்கம் செய்ய
Free PDF Tamil Panchangam for Jaya Varusham
Download
http://www.thanigaipanchangam.com
or
http://www.prohithar.com/jaya/index.php
![]() |
Jaya Varuda Tamil Free Panchangam - ஜய வருட பஞ்சாங்கம் 2014-15 |
Sri Thanigai Panchangam
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Tuesday, December 24, 2013
No comments:


Labels:
Free download,
Hindi Panchangam,
Jaya Varusham,
Manmatha,
sri thanigai Panchangam,
Tamil Panchangam,
Telugu,
ஜய வருட பஞ்சாங்கம் 2014 -15
Sunday, December 22, 2013
உண்மையான தைமாத பிறப்பு 21.12.2013
நாம் தற்பொழுது கொண்டாடும் பண்டிகைகள் அதற்குரிய(பருவத்தில்) தினத்தில் இல்லை,
பஞ்சாங்கத்தில் கடைபிடிக்கப்படும் நிலையான காலஅளவு, நிராயண முறை மற்றும் பூமியின் செயல்பாட்டிற்கு ஏற்ப பஞ்சாங்கத்தை திருத்தாதது மிகமுக்கியமான காரணம்.
பஞ்சாங்கத்தில் கடைபிடிக்கப்படும் நிலையான காலஅளவு, நிராயண முறை மற்றும் பூமியின் செயல்பாட்டிற்கு ஏற்ப பஞ்சாங்கத்தை திருத்தாதது மிகமுக்கியமான காரணம்.
வேதங்களில் குறிப்பிட்ட பருவ காலத்திற்கு மாறாக தற்பொழுது தவறான தேதியில் பண்டிகைகள், விரதங்கள், வாஸ்து நாள் கடைபிடிக்கிறோம், என்பது அறிவியல் பூர்வமான உண்மை!!!
பாலு சரவண சர்மா
http://www.thanigaipanchangam.com
![]() |
Tamil Panchangam - Thai Matha Pirappu தமிழ் பஞ்சாங்கம், தை மாத பிறப்பு |
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Sunday, December 22, 2013
No comments:


Tuesday, December 17, 2013
விஜய வருடம்(2014) தை மாத மடல்
விஜய வருடம் தை
மாத மடல்
- தை மாத பிறப்பு சிறப்பு தகவல்
- தை பொங்கல் படையல் நேரம்
- தை பூசம், தை கிருத்திகை என்று?
- தை மாத கிரஹப்பிரவேஸ நாட்கள்
- தை மாத முகூர்த்த நாட்கள்
- தை மாத நிச்சிய தாம்பூல நாட்கள்
- தை மாத மாலை நேர சுப நாட்கள்
- தை மாத காதுகுத்தல், திருமுடி இறக்கம் நாள்
- தை மாத சுபநாள் விளக்கம்
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Tuesday, December 17, 2013
No comments:


Saturday, December 07, 2013
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Saturday, December 07, 2013
No comments:


Monday, October 28, 2013
2014 Eclipse (கிரகணம் 2014ம் ஆண்டு)
2014 Eclipse (8.10.2014 ) Chennai - Tambaram Astronomy Club |
2014 Eclipse (கிரகணம் 2014ம் ஆண்டு)
இந்த ஆண்டு இரண்டு முழுசந்திர கிரகணங்கள், ஒரு குறை சூரிய கிரகணம், ஒரு பகுதி சூரிய கிரகணம் என நான்கு கிரகணங்கள் நிகழும்
தமிழகத்தை பொருத்த மட்டில் 8.10.2014 அன்று நிகழும் முழு சந்திரகிரகணம் (Total Lunar Eclipse) மட்டும் சென்னையில் தெரியும். மற்ற மூன்று கிரகணங்கள் தெரியாது
8.10.2014 அன்று பகலில் சூரியன் இருக்கும் பொழுது இந்திய நேரப்படி பகல் 1:42 மணிக்கு புறநிழல் கிரகணம் துவங்கி, பகல் 2:44 மணி அளவில் நிஜநிழல் கிரகணமாக பிரவேஸிக்கிறது, . கிரகணம் உச்சகட்டமாக மாலை 4:25க்கு அடைகிறது.
பகலில் நிகழும் சந்திரகிரகணம் தெரியாது அஸ்மனத்தில் மட்டுமே இது தெரியும். அன்று சென்னையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே அதாகில் மாலை 6:04 வரை மட்டுமே நிஜ நிழல் கிரகணம் தெரியும், பின்னர் புறநிழல் (Umbral) கிரகணம் இரவு 7:05 வரை தெரியும் (சுமார் 1 மணி 11 நிமிடங்கள்)
சூரியமறைவின் பொழுது அடிவானில் மேகமூட்டம், வளிமண்டல ஒளிச்சிதைவு காரணமாக நிஜகிரகணத்தினை காண்பது அரிதாகும், ஆயினும் புறநிழல் கிரகணத்தை காணலாம் (சந்திரனின் ஒளி சற்று மங்கலாக இருக்கும்). இதை வெறும் கண்களால் கிழக்கு திசையில் காணலாம்.
2014 Apr 15: Total Lunar Eclipse |
2014 Apr 29: Annular Solar Eclipse |
2014 Oct 08: Total Lunar Eclipse |
2014 Oct 23: Partial Solar Eclipse |
2014 Apr 15: முழு சந்திர கிரகணம் Total Lunar Eclipse
2014 Apr 29: குறை சூரிய கிரகணம் Annular Solar Eclipse
2014 Oct 08: முழு சந்திர கிரகணம் Total Lunar Eclipse
2014 Oct 23: பகுதி சூரிய கிரஹணம் Partial Solar Eclipse
Chennai - Tambaram Astronomy Club
Tuesday, October 22, 2013
பிழையான 2014 வருட காலண்டர்கள் விற்பனையில் உள்ளது !!
![]() |
2014 Tamil Calendar Mistake |
தற்பொழுது 2014 ம் ஆண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டாலும் இவைகளில் திதி, நட்சத்திர முடிவு நேரங்களில் எண்ணற்ற பிழைகள் உள்ளது. தற்பொழுது 25க்கும் மேற்பட்ட வடிவில் இவை கடைகளில் (கேக் என்கிற பெயரில்) விற்பனையில் உள்ளது. இதில் பிழைகளுக்கு யார் பொறுப்பு என்பது அறிய முடியாது ஏனெனில் அச்சிட்டவரின் முகவரி அதில் இருக்காது!
இவைகள் வானியல் துறைகளான இஸ்ரோவின் தகவலுடன் ஒத்துப்போகாமல் மிகவும் பிழையுடன் காணப்படுகிறது.
சந்திரனுக்கு வின்கலத்தை அனுப்பிய இந்திய அரசு இப்படி தவறாக தகவலுடன் அமாவாசை, பௌர்னமி, முடிவுகளை வெளியிடும் காலன்டர்களை தடை செய்ய வேண்டும்.
இந்த காலண்டர்கள் அறிவியலுக்கு சவால் விடும் வகையில் உள்ளன. குறிப்பாக திதி முடிவுகள் நாஸா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளையும், கணித இராமநுஜம் பிறந்த இந்த மண்ணை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.
பொதுமக்கள் வானியல் துறைக்கு கொஞ்சம்கூட ஒத்துப்போக, தொடர்பில்லாத இதுபோன்ற தவறான காலன்டர்களை புறக்கணிக்கவேண்டும்.
காலண்டர் என்பது வானியல். இந்த நிகழ்வு பூமிக்கு பொதுவானது. அப்படி இருக்க வானிலை துறையினர் செய்யும் சாகஸங்களை கேவலப்படுத்தும் இந்த காலண்டர் தயாரிப்பவர்கள் தங்கள் இஷ்டம்போல் தவறாக தகவலை வெளியிடுவதை அரசு ஒழங்குப்படுத்த வேண்டும்.
உணவு பொருட்களுக்கு அக்மார்க் போன்று காலண்டர்களுக்கும் அரசு தரநிர்ணயம் செய்ய வேண்டும்.
உணவு பொருட்களுக்கு அக்மார்க் போன்று காலண்டர்களுக்கும் அரசு தரநிர்ணயம் செய்ய வேண்டும்.
வானியல்துறை அறிவு கொஞ்சம்கூட இன்றி இப்படி காலன்டர் தயாரித்து வெளியிட்டால் இதை நம்பி தெவசம் செய்வதும், குழந்தைக்கு நட்சத்திரம் காண்பதும் தவறாகத்தான் இருக்கும்.
வானியல் என்பது அறிவியல் அதை பலதுறைகள் பயன்படுத்துகின்றன அதுபோல்தான் ஜோதிடமும் பயன்படுத்துகிறது.
வானியல் இல்லையேல் ஜோதிடம் இல்லை. ஆனால் ஜோதிடம் இல்லையென்றாலும் வானியல் துறை இருக்கும் ...! என்பதை இந்த காலன்டர் தயாரிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு சுமார் 292க்கும் மேற்பட்ட பிழைகள் உள்ளன. இதில் மிக அபத்தமான பிழைகள் 100க்கும் மேல் உள்ளது......இப்படிப்பட்ட காலன்டர்களை மக்கள் புறக்கணித்து இந்திய அரசின் வானியல் துறையினரின் காலன்டர்களை பயன்படுத்துங்கள்.
சந்திரனுக்கு வின்கலத்தை துல்லியமாக அனுப்ப உதவிய இந்திய வானியல் துறையின் மிக துல்லியமான தகவல் அடங்கிய இணையத்தை பார்த்து மிகச்சரியான திதி, நட்சத்திரம் அறிந்துக்கொள்ளுங்கள் (இது இந்திய வானியல் துறையினரின் பிரிவு)
http://www.packolkata.org/
மேற்படி இணைய தகவலையும் நீங்கள் வாங்கிய காலண்டரையும் ஒப்பிட்டு பாருங்கள் பின்னர் இந்த கட்டுரையின் உண்மை புரியும்.
மக்களையும் முட்டாளாக்கும் இதுபோன்ற காலண்டர்களை தமிழக அரசு ஒழுங்கப்படுத்த வேண்டும். மேலும் இவர்களால் பண்டிகைகள்கூட தவறாக கடைபிடிக்கப்படுகிறது.
தமிழ் தேதிகள் அறிவியலுக்கு ஒத்தப்போகாமல் பிழையாக உள்ளது என்பதும் உண்மை. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களையும் முட்டாளாக்கும் இதுபோன்ற காலண்டர்களை தமிழக அரசு ஒழுங்கப்படுத்த வேண்டும். மேலும் இவர்களால் பண்டிகைகள்கூட தவறாக கடைபிடிக்கப்படுகிறது.
தமிழ் தேதிகள் அறிவியலுக்கு ஒத்தப்போகாமல் பிழையாக உள்ளது என்பதும் உண்மை. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மட்டும்தான் இப்படி பிழையான அறிவியல் தகவல்களை காலண்டர்கள் வெளியிடுகிறது என்பது அவமானகரமான ஒன்று.
இது தொடர்பாக யாரேனும் விவாதிக்க வேண்டுமென்றால் வாருங்கள் பிர்லா கோளரங்கத்தில் சந்திப்போம் அல்லது கணித மேதை இராமனுஜம் நினைவு ஆய்வு கூடத்தில் கணித பேராசிரியர்கள் முன்னிலையில் அறிவுபூர்வமாக விவாதிக்கலாம். நான் தயார் ...!
குறிப்பு: முதல் நாள் துவங்கி வருட கடைசிநாள் வரையில் ஏதேனும் ஒருவகையில் சிறிய, பெரிய பிழகளுடன் காணப்படும. கடந்த சில வருட காலண்டர்களில் தமிழ் தேதியும் தவறாக உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
பாலு சரவண சர்மா
இது தொடர்பாக யாரேனும் விவாதிக்க வேண்டுமென்றால் வாருங்கள் பிர்லா கோளரங்கத்தில் சந்திப்போம் அல்லது கணித மேதை இராமனுஜம் நினைவு ஆய்வு கூடத்தில் கணித பேராசிரியர்கள் முன்னிலையில் அறிவுபூர்வமாக விவாதிக்கலாம். நான் தயார் ...!
குறிப்பு: முதல் நாள் துவங்கி வருட கடைசிநாள் வரையில் ஏதேனும் ஒருவகையில் சிறிய, பெரிய பிழகளுடன் காணப்படும. கடந்த சில வருட காலண்டர்களில் தமிழ் தேதியும் தவறாக உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
பாலு சரவண சர்மா
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Tuesday, October 22, 2013
No comments:


Labels:
2014 Tamil Daily Caledar,
2014 தமிழ் காலண்டர்கள் பிழை,
Dairy 2014,
Free,
Panchangam,
Sivakasi,
Tamil,
பஞ்சாங்கம்
மழைக்காலம் நெருங்கி வருகிறது ......
எச்சரிக்கை மழைக்காலம் நெருங்கிவிட்டது புயல்,
கனமழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்படலாம் ..!
எதிர்கொள்ள நீங்கள் தயார் நிலையில் உள்ளீர்களா?
முதலுதவி குறித்த கையேடு
http://www.prohithar.com/pdf/firstaid.pdf
முதலுதவி குறித்த கையேடு
http://www.prohithar.com/pdf/firstaid.pdf
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Tuesday, October 22, 2013
No comments:


Subscribe to:
Posts (Atom)