Pages

Monday, April 21, 2008

புதன் கிரகம் - வானியல் நிகழ்வு

வணக்கம்
 
புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் வருவதால் 23 ஏப்ரல் 2008 அன்று மிகவும் பிரகாசமாக தெரியும்
சூரியன் மறைவுக்கு பிறகு மேற்கு- வடமேற்கு திசையில் காணலாம்
வாழ்நாளில் காணக்கிடைக்காத ஒன்று, தவறவிடாதீர்கள் 
உங்கள் குழந்தைகளையும் இந்த நிகழ்வினை காணவழிசெய்யுங்கள்
 
See Mercury, the Elusive Planet

The planet Mercury is often cited as the most difficult of the five brightest naked-eye planets to see. Because it's the planet closest to the Sun, it never strays too far from the Sun's vicinity in our sky. It is often referred to as "the elusive planet." And there's even a rumor that Copernicus, never saw it, yet it's not really hard to see. You simply must know when and where to look, and find a clear horizon. And for those living in the Northern Hemisphere, a great "window of opportunity" for viewing Mercury in the evening sky is about to open up.

A bright evening "star"

Mercury just passed superior conjunction on April 16, but in the days to come it will bolt out to become easily visible low in the west-northwest at dusk. On Wednesday evening, April 23, Mercury should be visible within about 30 minutes after sunset if your sky is quite clear. Mercury will be shining at magnitude ?1.6, slightly brighter than Sirius (the brightest of all stars). In fact, at that particular hour of the day, Mercury will be the brightest object in the sky!


So, if your sky is free of any horizon haze and there are no tall obstructions to your view (like trees or buildings) you should have no trouble in seeing it as a very bright "star" shining with just a trace of a yellowish-orange tinge. By April 30, Mercury will be setting as late as 85 minutes after the Sun. That evening, binoculars may show the Pleiades star cluster 4 degrees directly above it. (Your clenched fist held at arm's length measures about 10 degrees in width.)

--
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Cell : 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email : prohithar@yahoo.com, Prohithar@gmail.com
Web : http://www.prohithar.com

Sunday, March 30, 2008

பூமி தினம் - இல்லத்தின் பங்கு

பூமி தினம் - இல்லத்தின் பங்கு

பூமி வெப்பமயமாதல் என்பது தொழிற்சாலைகளால் மட்டும் அல்ல இல்லத்தில் இருந்து துவங்குகிறது. இதை கீழ்கண்ட முறைகளால் புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்தலாம் அதே நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமையும்

மின்சாரம் சேமிப்பு

மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் நிலக்கரி எரித்து மின் உற்பத்தி செய்யப்படும் பொழுது வெளியேரும் கரிமலவாயுவினால் புவிவெப்பமடைவதை குறைக்கலாம்

தொலைக்காட்சி பெட்டி

யாரும் பார்க்காமலே வெறுமென இயங்கும் தொலைக்காட்சி பெட்டியை முற்றிலுமாக இயக்கத்தை நிறுத்தலாம்.

தொலைக்கட்டளை (ரிமோட்) மூலம் நிறுத்தினால் தொலக்காட்சி 25% மின்சாரம் எடுத்துக்கொண்டு அமைதியாக உள்ளேயே இயங்கும், எனவே முற்றிலும் அதன் மின் இணைப்பை துண்டிக்கவேண்டும்

கைத்தொலைபேசி மின்னேற்றி (Cellphone Charger)

மின்னேற்றம் இல்லாத பொழுது மின்னேற்றியை முற்றிலும் துண்டிக்கலாம்

மின் நீர் ஏற்றி (well Pump Motor)

வீட்டில் குறிப்பாக மேற்கத்திய மாதிரி கழிவறை களால் மிக அதிகமாக நீர் வீணாகிறது. எனவே இந்திய முறை கழிவறையை பயண்படுத்தி நீர் வீணாவதை தடுக்கலாம். மேலும் இந்திய முறை கழிவறையே மிகவும் சுகாதாரமானது

சரிவர மூடாத குழாய் முடிக்கி(Tap)யால் நீர்வீணாகிறது

தன்னீர் பயண்பாட்டை குறைப்பதன் மூலம் மின்னேற்றியால் ஏற்படும் மின்இழைப்பை தவிர்க்கலாம், நீர் வீணாகமல் தடுக்கலாம், நீர் ஆதாரமும் பாதுகாக்கப்படும்

இரவு விளக்கு (Night Lamp)

இரவில் எரியும் ஜீரோ விளக்கிற்கு பதிலாக திடவடிவ மின்விளக்கு (LED Light) நன்று

அம்மி குழவி (Mixtur)

அவசரமற்ற சூழலில் நேரம் இருக்கும் பொழுதி அம்மி குழவி, ஆட்டுக்கல் பயண்படு்த்தி மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் இதனால் உடலுக்கும் பயற்சி கிடைக்கும், பருமன் நோயினை தடுக்கலாம்

குமிழ் விளக்கு(Bulb)

உலகம் முழுவதும் குமிழ்விளக்கு பயண்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது ஆயினும் நமது நாட்டில் இன்னும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இது அதிக வெப்பத்தை உமிழ்கிறது எனவே குமிழ்விளக்கு பயண்பாடை குறைத்து அதைவிட அதிக ஒளிஉமிழும் அதே நேரத்தில் குறைவான வெப்பத்தை வெளிப்படுத்தும் சுருள் விளக்கு (CFL) பயண்படுத்தலாம்

வெளிச்சம் இருக்கும் பொழுது மின்விளக்குகளை தவிர்க்கலாம், தேவையில்லாமல் இயங்கும் மின்விசிறியை நிறுத்தவும் இதனால் மின்சாரத்தினால் புவி வெப்பமாதலை குறைக்கலாம் இதன் மூலம் நிலக்கரி இருப்பை மேலும் சில நூற்றாண்டுகள் வரை நீட்டிக்கலாம்

குப்பை எரிப்பு

வீடுகளில் மரம், செடியில் இருந்துவிழும் இலைகளை எரிக்காமல் அந்த செடியின் பக்கத்திலேயே குழிதோண்டி இலை, தழைகளை கொட்டுவதன் மூலம் உரமாக மாற்றலாம்

பெட்ரோல்

பக்கத்தில் உள்ள இடங்களுக்கு செல்ல நடந்தோ அல்லது மிதிவண்டியை பயண்படுத்துவதன் மூலம் பெட்ரோல் மூலம் வெளிப்படும் கரிமலவாயுவை குறைக்கலாம் பணமும், நாட்டின் அந்நிய செலாவணியும் மிச்சமாகும் அதைவிட உடலும் உறுதிபெறும்

4 பேர் செல்வதாக இருப்பின் மட்டும் மகிழ்வுஉந்தி(Car) பயண்படுத்தவும்

சமையல் எரிவாயு (Gas)

சமையலை முன்கூட்டி திட்டமிடுவதன் மூலம், காய்கறிகளை முன்தாக துண்டாக்கிக்கொண்டு அனைத்து பொருட்களையும் தயாராக வைத்துக்கொண்டு எரிவாயு அடுப்பை பயண்படுத்தினால் சமையல் எரிவாயு தட்டுப்பாடை சமாளிக்கலாம் உலக வெப்பமயமாதலையம், செலவீனத்தையும் குறைக்கலாம்

நீராவி பாத்திரம் (குக்கர்) பயண்படுத்துவதும் மிகவும் சிக்கனமானது

குளிர்பதனி (Fridge)

பொருட்கள் இல்லாதபொழுது மற்றும் 2 நாட்கள் தொடர்ந்து வீட்டை மூடும் காலத்தில் குளிர்பதனியை நிறுத்தவும்

அறை குளிர்ப்பான்(Room Airconditionor)

பருவசூழல் நன்கு உள்ள காலத்தில் அறை குளிரூட்டியினை தவிர்க்கவும், சரியான அளவு குளிரூட்டியினை பயண்படுத்தவும் அடிக்கடி அதன் பாகங்களை துடைப்பதன் மூலம் மிக அதிக செலவீனத்தை குறைக்கலாம், மின்சாரத்தை சேமிக்கலாம்

நீர் சூடாக்கி (Wate heater)

இல்லங்களில் அதிக மின் பயனீட்டை எடுத்துக்கொள்ளளும் நீர் சூடாக்கி இயந்திரத்திற்கு பதிலாக சூரிய ஒளியில் இயங்கும் நீர்சூடாக்கியை பயண்படுத்தலாம் இதனால் மின்கட்டனம் குறையும், கட்டிட வரைபட விதிகளில் தற்பொழுது கட்டாயம் என்றாலும் நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்துவதில்லை
மேலும் பலவழிகளில் உலக வெப்பமயமாக்கலை தவிர்ப்பதன் மூலம் வருங்கால நம் சந்ததியினர் நலமுடன் வாழ இல்லத்தில் இருந்து இந்த பயணத்தை துவக்குவோம்

பாலு. சரவணன்
இயற்கை ஆர்வலர்

Sunday, December 09, 2007

திருமணத்திற்கு முன் 'வரவேற்பு' நிகழ்ச்சி தேவையா ?

திருமணத்திற்கு முன் 'வரவேற்பு' நிகழ்ச்சி தேவையா ?

வரவேற்பு என்பது திருமணம் முடிந்த பிறகு செய்வதுதான் நல்லது, ஏனெனில்
இந்திய பண்பாட்டில் மணமக்கள் திருமணத்திற்கு பின்னர்தான் தம்பதி என்கிற
உன்னதமான குடும்ப நிலை அடைகின்றனர். அதற்கு முன்னர் அவர்களை வாழ்த்தலாம்
ஆனால் இதுபோன்று முன்கூட்டியே தம்பதி என்கிற தகுதிநிலை அளிப்பது
சட்டப்படியும், தர்மப்படியும் தவறு.

இன்னும் சொல்லப்போனால் நிச்சியதாம்பூலத்தின் பொழுதே தம்பதி
போன்று பாவனை செய்வது தவறாகும். திருமணத்திற்கு முன்னர் இடையில்
எதுவேண்டுமானாலும் நடைபெறாலாம் என்பதை யாரும் மறுக்க இயலாது

முறையான திருமணத்திற்கு முன்னர் (தாலிகட்டும் முன்னர்) வரை எந்த
பெண்னும், ஆணும் பதிவு திருமணம் செய்ய துணிவார்களா? அவர்களின்
பெற்றோர்கள் தான் இதற்கு (பதிவு திருமணம்) உடன்படுவார்களா? (காதல்
திருமண நிலைப்பாடு வேறு அதை பெரியவர்கள் ஒப்புதலுடன் நடைபெறும் இதனுடன்
ஒப்பிடஇயலாது)

வரவேற்பு நிகழ்சியில் கலந்துக்கொள்வது என்பது வருகைப்பதிவேட்டில்
கையழுத்து இடுவது போன்றது, நீண்ட வரிசையில் நின்று அன்பளிப்பை மணமக்கள்
கையில்தந்து, கையை குலுக்கிவிட்டு ஒளிப்படத்தில் (Video) முகத்தை
காட்டினால் திருமணத்திற்கு வருகை தந்தது பதிவாகிவிடும் என்று மனநிறைவை
ஏற்படுத்திக்கொண்டு உணவுக்கூடம் சென்று பாதியில் உணவு
உட்கொண்டிருப்பவரை எழுப்பும் வகையில் அவர் பின்னால் நின்று அவரையும்,
நம்மையும் தர்மசங்கடப்படுத்தி சாப்பாட்டுப்போட்டியில் பங்கேற்பதுதான்
தற்கால 'வரவேற்பு' நிகழ்ச்சி !

வயதானவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்து
மணம்விட்டு பேசி ஆறுதல் அடைய இயலாதளவு காதைசெவிடாக்கும் இசைக்கச்சேரியின்
ஒலிஅளவு! (குறிப்பு : இசை ஒரு கலை அது மணிதமனதிற்கு இதமான ஒரு தேவைதான்
ஆனால் அது இம்சையாக இருக்ககூடது என்பது தான் என் எண்ணம்) இதனால்
திருமணம் ஆகாமல் உள்ளவர்களுக்கு உறவினர்களுடன் பேசி வரன் தேட
முடியவில்லை. மண்டபத்தை விட்டு வெளியில் வந்தால் போதும் என்று உள்ளது,

வேலக்கு போகிறவர்களுக்கு வசதி என்பதுதான் இதில் உள்ள ஒரே சாதகம்
அன்றி வேறு எந்த நோக்கமும் இல்லை.

முன்பெல்லாம் பெட்ரோமாஸ் விளக்கு ஒளியில் மணமகள் அல்லது மணமகன் சிறு
குழந்தைகளுடன் சூழ மெதுவாக 'காரீல்' கோவிலில் இருந்து புறப்பட்டு
ஊர்வலம் வர பெண்கள் கலாசார பட்டாடை உடுத்தி, இளம் கண்னியர் பாவாடை, தாவனி
அனிந்து, நகைகள் மின்ன அழகுற ஒய்யாரமாக பின்னால் வரிசை தட்டுகள் ஏந்தி
வருவதுதான் முன்நாள் இரவு நிகழ்ச்சியாக இருந்தது ஆனால் 'வரவேற்பு'
கலாசாரத்திற்கு பின்னர் 'அழைப்பு' ஊர்வலம் முற்றிலுமாக மறைந்துக்கொண்டு
வருகிறது

இந்நிலையில் இனிமேல் மண்டபத்தை இரவு 12மணி முதல் மறுஇரவு 12 மணிவரை
வாடகைக்கு எடுத்து காலையில் 9 மணி அளவில் திருமணமும் அன்றே மாலை வரவேற்பு
நிகழ்சியும் வைத்துக்கொள்ளலாம்,

மாலையில் திருமணம் செய்வதும் (இரவு முகூர்த்தம் ) தற்பொழுது
நடைமுறையில் உள்ளது இதைகூட கடைபிடிக்கலாம் இதனால்

மண்டப செலவில் மாற்றம் இருக்காது
வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும்
வரவேற்பில் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் முழுமையாகும்
சட்டப்படியும், பண்பாட்டின்படியும் சரியானதாகும்
வருபவர்கள் மஞ்சள் அரிசி(அட்சதை)யால் மனமாற வாழ்த்தலாம்
தாலி கட்டாதவரை ஒருத்தி மணப்பெண் என்பதும் தாலிகட்டிய உடனே அவளை
மனைவி என்பதும் இயல்பான தற்பொழுதைய சமுதாய நிலை

தாலிகட்டும் முன்னர் ஏற்படும் பிரச்சனையை அனுகும் விதத்திலும்
தாலிகட்டிய மறுவினாடி ஏற்படும் பிரச்சனையை அணுகும் விதத்திலும்
சட்டபூர்வ, சமூக நிலையிலும் நிச்சயம் மிகப்பெரிய வேறுபாடு உள்ளதை யாரும்
மறுக்கமுடியாத சூழலில் தாலிகட்டும் முன்னர் ' வரவேற்பு' என்பது
பொருத்தமற்ற ஒன்று என்பதே எனது கருத்து

இதில் மாற்றம் தேவை !

இது விடயம் தங்களின் மேலான ஆக்கபூர்வமான மற்றும் மாற்று கருத்துக்கள்
வரவேற்கப்படுகிறது !

பாலு. சரவண சர்மா

15 சூலை 2007

மின்னஞ்சல் : prohithar@yahoo.com

--
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Cell : 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email : prohithar@yahoo.com,Prohithar@gmail.com
Web : http://www.prohithar.com

Tuesday, July 17, 2007

திருமணத்திற்கு முன் 'வரவேற்பு' நிகழ்ச்சி தேவையா ?

திருமணத்திற்கு முன் 'வரவேற்பு' நிகழ்ச்சி தேவையா ?

வரவேற்பு என்பது திருமணம் முடிந்த பிறகு செய்வதுதான் நல்லது, ஏனெனில் இந்திய பண்பாட்டில் மணமக்கள் திருமணத்திற்கு பின்னர்தான் தம்பதி என்கிற உன்னதமான குடும்ப நிலை அடைகின்றனர். அதற்கு முன்னர் அவர்களை வாழ்த்தலாம் ஆனால் இதுபோன்று முன்கூட்டியே தம்பதி என்கிற தகுதிநிலை அளிப்பது சட்டப்படியும், தர்மப்படியும் தவறு.
இன்னும் சொல்லப்போனால் நிச்சியதாம்பூலத்தின் பொழுதே தம்பதி போன்று பாவனை செய்வது தவறாகும். திருமணத்திற்கு முன்னர் இடையில் எதுவேண்டுமானாலும் நடைபெறாலாம் என்பதை யாரும் மறுக்க இயலாது

முறையான திருமணத்திற்கு முன்னர் (தாலிகட்டும் முன்னர்) வரை எந்த பெண்னும், ஆணும் பதிவு திருமணம் செய்ய துணிவார்களா? அவர்களின் பெற்றோர்கள் தான் இதற்கு (பதிவு திருமணம்) உடன்படுவார்களா? (காதல் திருமண நிலைப்பாடு வேறு அதை பெரியவர்கள் ஒப்புதலுடன் நடைபெறும் இதனுடன் ஒப்பிடஇயலாது)

வரவேற்பு நிகழ்சியில் கலந்துக்கொள்வது என்பது வருகைப்பதிவேட்டில் கையழுத்து இடுவது போன்றது, நீண்ட வரிசையில் நின்று அன்பளிப்பை மணமக்கள் கையில்தந்து, கையை குலுக்கிவிட்டு ஒளிப்படத்தில் (Video) முகத்தை காட்டினால் திருமணத்திற்கு வருகை தந்தது பதிவாகிவிடும் என்று மனநிறைவை ஏற்படுத்திக்கொண்டு உணவுக்கூடம் சென்று பாதியில் உணவு உட்கொண்டிருப்பவரை எழுப்பும் வகையில் அவர் பின்னால் நின்று அவரையும், நம்மையும் தர்மசங்கடப்படுத்தி சாப்பாட்டுப்போட்டியில் பங்கேற்பதுதான் தற்கால 'வரவேற்பு' நிகழ்ச்சி !

வயதானவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்து மணம்விட்டு பேசி ஆறுதல் அடைய இயலாதளவு காதைசெவிடாக்கும் இசைக்கச்சேரியின் ஒலிஅளவு! (குறிப்பு : இசை ஒரு கலை அது மணிதமனதிற்கு இதமான ஒரு தேவைதான் ஆனால் அது இம்சையாக இருக்ககூடது என்பது தான் என் எண்ணம்) இதனால் திருமணம் ஆகாமல் உள்ளவர்களுக்கு உறவினர்களுடன் பேசி வரன் தேட முடியவில்லை. மண்டபத்தை விட்டு வெளியில் வந்தால் போதும் என்று உள்ளது

வேலக்கு போகிறவர்களுக்கு வசதி என்பதுதான் இதில் உள்ள ஒரே சாதகம் அன்றி வேறு எந்த நோக்கமும் இல்லை.

முன்பெல்லாம் பெட்ரோமாஸ் விளக்கு ஒளியில் மணமகள் அல்லது மணமகன் சிறு குழந்தைகளுடன் சூழ மெதுவாக 'காரீல்' கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலம் வர பெண்கள் கலாசார பட்டாடை உடுத்தி, இளம் கண்னியர் பாவாடை, தாவனி அனிந்து, நகைகள் மின்ன அழகுற ஒய்யாரமாக பின்னால் வரிசை தட்டுகள் ஏந்தி வருவதுதான் முன்நாள் இரவு நிகழ்ச்சியாக இருந்தது ஆனால் 'வரவேற்பு' கலாசாரத்திற்கு பின்னர் 'அழைப்பு' ஊர்வலம் முற்றிலுமாக மறைந்துக்கொண்டு வருகிறது

இந்நிலையில் இனிமேல் மண்டபத்தை இரவு 12மணி முதல் மறுஇரவு 12 மணிவரை வாடகைக்கு எடுத்து காலையில் 9 மணி அளவில் திருமணமும் அன்றே மாலை வரவேற்பு நிகழ்சியும் வைத்துக்கொள்ளலாம்


மாலையில் திருமணம் செய்வதும் (இரவு முகூர்த்தம் ) தற்பொழுது நடைமுறையில் உள்ளது இதைகூட கடைபிடிக்கலாம் இதனால்


மண்டப செலவில் மாற்றம் இருக்காது
வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும்
வரவேற்பில் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் முழுமையாகும்
சட்டப்படியும், பண்பாட்டின்படியும் சரியானதாகும்
வருபவர்கள் மஞ்சள் அரிசி(அட்சதை)யால் மனமாற வாழ்த்தலாம்

தாலி கட்டாதவரை ஒருத்தி மணப்பெண் என்பதும் தாலிகட்டிய உடனே அவளை மனைவி என்பதும் இயல்பான தற்பொழுதைய சமுதாய நிலை

தாலிகட்டும் முன்னர் ஏற்படும் பிரச்சனையை அனுகும் விதத்திலும் தாலிகட்டிய மறுவினாடி ஏற்படும் பிரச்சனையை அணுகும் விதத்திலும் சட்டபூர்வ, சமூக நிலையிலும் நிச்சயம் மிகப்பெரிய வேறுபாடு உள்ளதை யாரும் மறுக்கமுடியாத சூழலில் தாலிகட்டும் முன்னர் ' வரவேற்பு' என்பது பொருத்தமற்ற ஒன்று என்பதே எனது கருத்து

இதில் மாற்றம் தேவை !

இது விடயம் தங்களின் மேலான ஆக்கபூர்வமான மற்றும் மாற்று கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது !
பாலு. சரவண சர்மா
15 சூலை 2007
மின்னஞ்சல் : prohithar@yahoo.com

Thursday, December 28, 2006

காசியில் அஸ்தி கரைத்தல்

காசியில் அஸ்தி கரைத்தல்
(புரோகிதர் துணையின்றி செய்யும் முறை)


முன்னேற்பாடு

முதலில் அஸ்தி பானையை படியில் வைக்கவும் .
பூஜைக்கு தேவையான பொருட்களை அதன் அருகில் வைக்கவும் .
கங்கையில் தலை மூழ்கி குளிக்கவும் பிறகு நெற்றியில் குல வழக்கப்படி விபூதி அல்லது நாமம் இடவும் .
ஈரத்துணியுடன் மந்தார இலை மீது சிறிதளவு தர்பையை பரப்பி அதன் மீது அஸ்தி பானை வாயை திறந்து வைக்கவும்.
அஸ்தி பானைக்கு முன்னால் ஒரு இலை போடவும் அதில் வெற்றிலை 2, பாக்கு 2, பழம் 2, ஒரு ரூபாய் காசு வைக்கவும்
வீட்டில் உறவினர்கள் தந்த சில்லரை காசுகள், வில்வம், சிறதளவு தர்பை ஆகியவற்றை அஸ்தி பானையில் போடவும்

படையல்

இறந்தவருக்கு பிடித்த பழங்கள், இனிப்பு, காரம் ஆகியவற்றை இலையில் வைக்கவும் .
அவர் பயன்படுத்திய துணிகளை இலையில் வைக்கவும் .

தானம்

வெற்றிலை 2, பாக்கு2, பழம்1 அதன் மீது ரூபாய் 101 தட்சணையை இலைக்கு முன்னால் வைக்கவும். (பூஜை முடிந்த பிறகு எதிரில் தென்படும் சம்பாதிக்க இயலாத ஒரு முதியவருக்கு தானம் செய்யவும் )

வழிபாடு

இறந்தவரை மனதில் தியானித்து பின் வருமாறு வழிபடவும்

மூக்கு - மூக்கிற்கு வாசைனையாக ஊதுபத்தி ஏற்றி அஸ்தி கலசத்திற்கு காட்டவும்
காது - செவிற்கு இனிமையாக தேவாரம், சிவபுராணம், திவ்யப்பிரபந்தம் பாடவும் (புத்தகம் வைத்தும் பாடலாம்)
வாய் - வாய்க்கு சுவையாக படையலில் உள்ள அனைத்து உணவு பொருட்களை ஏற்றுக்கொள்ளுமாறு பாவனை செய்யவும்1 டம்ளர் கங்கை நீரை கலசத்தின் அருகில் வைக்கவும் .
அரவணைப்பு (தொடு உணர்வு) -அஸ்தி கலசத்தை கைகளால் தொட்டு இறந்தவரின் பாதத்தை தொடுவதாக நினைத்து தலை வணங்கி மரியாதை செலுத்தவும்.
கண் - கண்களுக்கு மோட்ச தீபம் அஸ்தி கலசத்திற்கு கற்பூர தீப ஆராதனை செய்யவும்
பிரார்த்தனை- கையில் வில்வம், துளசியை வைத்து கொண்டு கலசத்தை நோக்கி இறந்தவரை மனதில் தியானித்து அவர் நற்கதி அடைய வேண்டும், பாவங்கள் நீங்கி இறைவனடி சேர வேண்டும், மீண்டும் நற்பிறவி எடுத்தால் இதே குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று வேண்டி கையில் உள்ள வில்வம், துளசியை அஸ்தி கலசத்தில் போடவும்.

அஸ்தி கரைக்கும் முறை

அஸ்தியை தலையில் வைத்து கொண்டு சிவ சிவ, நாராயணா நாராயணா என்று கூறி கங்கையில் இடுப்பு அளவு நீரில் இறங்கவும், தலையிலிருந்து இறக்கி இடது கையில் ஏந்தவும்
வலது கையில் முதலில் கபால ஓட்டை (தலை எலும்பு) வில்வம், தர்பையும் சேர்த்து வைத்து கொண்டு சிவ சிவ என்று கூறி மோட்சம் அடைவாயாக என்று சொல்லி கங்கையில் கரைக்கவும்.
மற்ற எலும்புகளையும் வில்வம் தர்பை சேர்த்து கங்கையில் கரைக்கவும்.
அஸ்தி பாத்திரத்தை சுத்தம் செய்து கரையில் வைக்கவும்.
ஒரு சொம்பு கங்கை நீரை இடது கையில் வைத்து கொண்டு வலது கையில் எள்ளையும், தர்பையையும் எடுத்து கொண்டு கோத்திரம், இறந்த மூன்று தலைமுறை மற்றும் மூதாதையர்கள் பெயரை சொல்லி கங்கையில் எள், தண்ணீர் விடவும். (தர்ப்பணம் செய்வது போல்)
இறந்தவரின் துணிகளை கங்கையில் விடவும் .

மோட்சதீபம்

நெய் தீபத்தை பாக்கு தொன்னையில் வைத்து ஓடும் கங்கை நீரில் விடவும், தீபத்தை தரிசனம் செய்து மோட்சம் அடைவாயாக என்று கூறி பிரார்த்திக்கவும்

கங்கையில் தலை குளிக்கவும், குல வழக்கப்படி விபூதி அல்லது நாமம் இடவும், சாதாரணமாக உடை உடுத்திக்கொண்டு விச்வநாதரை தரிசிக்கவும்
படையலில் உள்ள பிரசாதத்தை சிறிதளவு உண்ணவும். மற்ற பிரசாதத்தை ஒரு பையில் போட்டு தானத்திற்கு வைத்த தட்சனையுடன் தானம் செய்யவும் .
கோவில் அருகே விஷ்ணுபாதம் தகடு வாங்கவும், பிறகு சங்கரமடம் சென்று அன்னதானத்திற்கு தங்களாலான தொகையை தர்மம் செய்யவும்
தங்கும் இடம் சென்று பொருட்களை எடுத்து கொண்டு, ஓட்டலில் சைவ உணவு சாப்பிடவும், பிறகு ரயில் நிலையம் வரவும்.

காசி சங்கர மடம் முகவரி :

சங்கரமடத்தில் தங்கும் வசதி உள்ளது, மேலும் கங்கை கரையின் மிக அருகில் அமைந்துள்ளது, முன்னதாக தொலைபேசியில் பதிவு செய்யவும்.

திரு.v.s.சுப்ரமணியன் (மேனேஜர்)
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்ய சுவாமிகள் மடம்
B 4/ 7, ஹனுமான் காட், வாரனாசி - 221 001
PHONE - (STD 0542) 2277915 / 2276932

பயணத்தின் பொழுது
சிவபுராணம், கருட புராணம் படித்தல் நன்று

வாரணாசி இரயில் நிலைய தொலைபேசி எண்கள்
Varanasi Railway Station Phone : 131, 132, 133

வீட்டிலிருந்து புறப்படும் முன்னர்
படையல் போடவும், பசுவிற்கு தானம் செய்யவும்

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
தேவையான சாமான்கள்
( சென்னையில் வாங்கவும் )

விபூதி 1பாக்கெட்
நாம சூர்ணம்
திரி 3
குங்குமம் 10கிராம்
சந்தன வில்லை 5
நெய் 50கிராம்
தர்பை சிறிதளவு
எள் 50கிராம்
ஊதுபத்தி 1பாக்கெட்
கற்பூரம் 25கிராம்
தீப்பெட்டி 1
பாக்கு 50கிராம்
பாக்கு தொன்னை 6
பிளேடு 1

தேங்காய் 2
மந்தார இலை 3
வாழைக்காய் 1
அகல் 2
சில்லரை காசுகள் 50

இனிப்பு
காரம்

வீட்டில் இருந்து

இறந்தவர் பயன்படுத்திய துணி
சிவபுராணம்
பஞ்சபாத்திரம், உத்திரணி
டம்ளர், மணி
சிறிய தாம்பாளத்தட்டு 1
கேமரா, பிலிம்

தேவையான சாமான்கள்
(காசியில் வாங்கவும் )

வெற்றிலை 25
பூச்சரம் 2முழம்
துளசி, வில்வம்
வாழைப்பழம்
பழங்கள்
வாழைக்காய் 1
அரிசி 1 கிலோ
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பாலு. சரவண சர்மா
புரோகிதர்-ஜோதிடர்
எண் 9, 4வது தெரு, கல்யாண் நகர், தாம்பரம் மேற்கு, சென்னை 45.
தொலைபேசி : 91 44 2226 1742, 91 98403 69677
மின்னஞ்சல் : prohithar@yahoo.com
இணையம் : http://www.prohithar.com/

28 Dec 2006

Tuesday, December 26, 2006

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம்


Tambaram Regional Transport Office
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம்


தாம்பரம் பகுதி மக்களின் பல ஆண்டுகள் வேண்டுகோளான தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் (RTO) தாம்பரத்தில் துவக்கப்படுவது மிகவும் மகிழ்சியான விஷயம் . இந்த முயற்சிக்கு உறுதுனையாக இருந்து செயல்படுத்திய அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிக்கை துறையினரையும் நாம் பாராட்டவேண்டும்

அன்மையில் உள்ள பல்லாவரம், திருநீர்மலை மலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு மலைகளின் இயற்கை சூழலானது அழிந்து விட்டது.

தாம்பரம் மலை அடிவாரம் இயற்கையை நேசிக்கும் இயற்கைஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்களின் முயற்சியால் ஆக்கிரமிப்பு இன்றி பசுமையாக இயற்கை எழில் கொஞ்சுகிறது. இங்கு மூலிகைச்செடிகள், சிறு மரங்கள் வளர்ந்தும், காட்டு அணில், குள்ளநரி, முள்ளம்பன்றி, குரங்கு, முயல், பாம்பு, கீரி, உடும்பு போன்ற விலங்கினங்கள், அழிந்து வரும் கழுகு இனம் ஆகியவை சுதந்திரமாக வாழ்கிறது

இத்தகைய இயற்கை சூழல் அமைந்த மலையடிவாரத்தில் அமையவுள்ள தாம்பரம் RTO அலுவலகத்தின் அருகில் உள்ள மலைப்பகுதி RTO அலுவலக இடைத்தரகர்கள் கடை, டீக்கடை, சிறுவனிகம், வாகனநிறுத்தம் ஆகிய ஆக்கிரமிப்பால் மலையின் இயற்கை சூழல் அழியும் ஆபத்து உள்ளது

ஆக்கிரமிப்பினை தடுக்கும் பொருட்டு வனத்துறையும், நகராட்சியும் மலையைசுற்றி வேலியிட வேண்டும், ஆக்கிரமிப்பை துவக்கத்திலேயே கண்டறிந்து அகற்றபடவேண்டும். இதுதான் இயற்கை ஆர்வலர்களின் வேண்டுகோள்.

பாலு. சரவண சர்மா
98403 69677
26 / 12 / 2006

Sunday, December 10, 2006

Pooja time and Smoke Alarm

Pooja time and Smoke Alarm

If you perform the homam in your house / Office please note the following safety Tips

  • Temporarily disconnect your smoke alarm
  • You can slightly twist the smoke alarm off so it will hang and then wrap aluminum foil around it, this will prevent it from going off
  • If battery operated remove the battery.
  • If electrically operated remove the backup batteries and from the main panel turn the smoke alarm circuit off.
  • If connected to the security system call your alarm company and turn off the smoke alarm system.
  • Do not forget to enable your smoke alarm after the homam. If you do, please note that the priest are not responsible.
  • Please Keep 5 numbers of Pale of water near homam for fire safety
    Safety First Safety First Safety First Safety First Safety First Safety First Safety First

http://www.prohithar.com/