சென்னையில் ஐப்பசி மாதம் இறுதி நாள் 16.11.2009 திங்கள் அன்று சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசிக்கிறார். எனவே மறுநாள் 17.11.2009 செவ்வாய் கார்திகை முதல் தேதி என கணணம் செய்யப்படுகிறது
கார்திகை மாதப்பிறப்பும் சித்தாந்த முறைகளும்
ஆரியபட்டீயம்சித்தாந்தம் 30:40 (மாலை 6:24 மணி) அளவில் சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசம் ஆதாவது கார்திகை மாதபிறப்பு
வரருசி சித்தாந்தம்: 30:49 (மாலை 6:28 மணி) அளவில் சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசம் ஆதாவது கார்திகை மாதபிறப்பு
சுத்த திருக்கணிதப்படி (அறிவியல் பூர்வமாக) 16.11.2009 திங்கள் அன்று பகல் 11:09 மணிஅளவில் விருச்சிக ராசியில் சூரியன் பிரவேசிக்கிறார் எனவே அன்று தான் கார்திகை மாதம் முதல் தேதி ஆகும் ஆனால் தமிழகத்தில் மாதப்பிறப்பினை சுத்த திருக்கணிதப்படி கணக்கிடுவதில்லை மாறாக வாக்கிய முறைப்படி மற்றும் ஆரியசித்தாந்தம் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பதுதான் உண்மை.(வாசன் திருக்கணிதப்பஞ்சாங்கத்தில்கூட இப்படித்தான்)
சூரியன் மறைவு மாதப்பிறப்பினை கணக்கிடுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது எனவே சூரிய அஸ்தமனத்தின் அடிப்படையில் வாக்கிய, ஆரியபட்டீயம் முறைப்படி 17.11.2009 அன்று தான் கார்திகை மாதபிறப்பு ஆகும். தமிழகத்தை பொருத்தமட்டில் தஞ்சை, திருச்சி, ஆற்காடு, சென்னை நகரங்களின் அடிப்படையிலேயே பஞ்சாங்கம் வெளியிடுவதால் 17.11.2009 செவ்வாய் அன்றுதான் கார்த்திகை மாத முதல் தேதி ஆகும்.
16.11.2009 திங்கள் அன்று சென்னை சூரிய உதயம் 6:08, சூரிய அஸ்தமனம்: மாலை 5:39(சூரியனின் மையப்புள்ளி)
கேரளாவில் மலையாள மாதப்பிறப்பு கணக்கீடு ஒருநாளில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உள்ள காலத்தில்3ல் 5பாகத்தின் உள் காலத்தில் (சுமார் மதியம் 1:12 மணி) சூரியன்அடுத்த இராசியில் பிரவேசிக்கும் காலம் மாதப்பிறப்பு ஆகும் எனவே ஒரு நாள் முன்னதாக கேரளாவில் கார்திகை மாதம் பிறக்கும். கேரளாவில் திருக்கணிதமுறை பரவலாக பயண்படுத்தப்படுகிறது
English Date: Monday 16 November 2009Malayalam Date: Vrishchikam 1,Kollam 1185
சபரிமலைக்கு மாலை போடுபவர்கள் (தமிழ் நாட்டில் உள்ளவர்கள்) ஐப்பசி மாதம் கடைசி நாள் அன்று மாலை 7 மணி அளவில் மாலை போடலாம் (தமிழ் மாதமும் பிறந்து விடும்)
மண்டலபூஜை மஹோச்சவம் காலம் Mandalapooja Maholsavam 15-11-2009 to 26-12-2009
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் ஆகும், 360 பாகையை 30 ஆல் (அமாவாசை முதல் பவுர்னமி வரை உள்ள திதிகள் 30) வகுக்க வருவது 12 பாகை அதாவது ஒரு திதி என்பது 12 பாகை ஆகும் இதில் அமாவாசையை முதலாக வைத்து கணக்கிடும் முறை ஆகும்
அமாவாசை என்பது சூரியனுக்கு மிக அன்மையில் 0 பாகைமுதல் 12 பாகையில் சந்திரன் வரும் நாள் ஆகும். துல்லியமாக கணிக்க நிராயண(Sidereal) அளவில் சூரியனின் பாகையிலிருந்து சந்திரனின்(Moon's Earth orbit) புவிவட்ட கோணத்தை கழிக்க மீதம் வரும் தொகையை 12ஆல் (ஒரு திதி என்பது 12 பாகை ஆகும்) வகுக்க வரும் அளவே திதி ஆகும்:
உதாரணம். 18.9.2009 (புரட்டாசி 2) அன்று காலை 5:30 IST மணி அளவில் சூரியன் நிலை 151பாகை14மினிட் இதிலிருந்துசந்திரன் நிலை140பாகை40 மினிட் கழிக்க = 10பாகை:34 மினிட்வருவதால் அன்று அமாவாசை துவங்கி 1பாகை 26 மினிட் கடந்து பெருமளவு நாள் முழுவதும் அமாவாசை உள்ளது
சூரியனின் பாகையிலிருந்து சந்திர பாகை கழிக்க 180 பாகை வரும் நாளே பவுர்னமி ஆகும். மிக விளக்கமாக அடுத்து வரும் வான் இயற்பியல் (Astrophysics) கட்டுரைகளில் தருகிறேன்.
குறிப்பு: திதியின் பாதி அளவே கரணம் ஆகும்(6 பாகை அளவு), கரணம் மொத்தம் 11 ஆகும் அமாவாசை அடுத்த பிரதமை திதியின் பின்பாதியில்"பவ" கரணம் துவங்கும்.
Tithi: The moment of new Moon, or that point of time when the longitudes of Sun andMoon are equal is called 'amavasya'. The tithi is the time taken by the Moon inincreasing its distance from the Sun by 12 degrees. The complete revolution of the Moon(29.5 days) occupies 30 tithis for 360 degrees. Since the motions of the Sun and Moonare always varying in speed the length of a tithi constantly alters.
இந்த ஆண்டு (விரோதிஆண்டு) மஹாளய பட்சம் (ஆவணி 20 ஆம் தேதி) 5.9.2009 சனிக்கிழமை அன்று துவங்கி (புரட்டாசி 2ஆம் தேதி) 18.9.2009 வெள்ளிக்கிழமைமாளயஅமாவாசைஅன்று முடிவடைகிறது.
This year Mahalayam Patcham beginning from 5.9.2009 Saturday and Ends on 18.9.2009 Friday
மாளய பட்சத்தில் அமாவாசை முன்னால் வரும் நாட்களில் மிகவும் சிறப்பான நாட்கள்
Auspicious days for ancestors - Before Malaya amavasai
வழிபாடு:மேற்படி தினங்களில் தர்பணம், அன்னதானம், ஆத்மாசாந்தி, படையல் வழிபாடு நன்று
Mode of Prayer: perform Tharpanam, Food Donation, Atma Shanthi Prayer
பசு- கோமாதா
மாளயபட்சத்தில் மேல் குறிப்பிட்ட நாட்களில் காலை 2 கிலோ கோதுமை தவிடு, 100 கிராம் வெல்லம், உறுவிய அகத்திகீரை 50 கிராம் எள்ளு ஆகியவற்றை கலந்து ஊரவைத்து பசுவிற்கு தானமாக தரவும்.
தாய் - தகப்பனார் உள்ளவர்கள் இதைசெய்யலாமா?
தகப்பனார் இருந்தும் அவர் மாளயபட்ச வழிபாட்டை செய்யாத நிலையில் மகன், மகள் யார் வேண்டுமானாலும் மாளயபட்ச வழிபாட்டை செய்யலாம். "தர்பணம்" தவிர்த்து பசுவிற்கு தானம், ஆதரவற்றோர் இல்லங்களில் தானம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, ஆத்ம சாந்தி வழிபாடு, வேதபாடசாலைக்கு உதவி போன்ற வழிகள் மூலமாகவும் வழிபாடு செய்யலாம்.
அமாவாசை தினம் என்பது இறைவனடி சேர்ந்த மூதாதையர்களை (பித்துர்களை) நினைத்து அவர்களுக்கு வழிபாடு செய்யும் நாளாகும்.நமது முற்பிறவியில் நாம் அனுபவித்த துன்பங்களுக்கும், இனி வரும் பிறவிகளில் நற்பிறவி எடுக்கவும், நம் சந்ததியினிர் நலமுடன் வாழவும் வழிபட மிகவும் புனிதமான நாளே அமாவாசை ஆகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று நீராடி மூதாதையர்களுக்கு படையல், தர்ப்பணம், ஆத்ம சாந்தி பூஜை, பசுவிற்கு அகத்திகீரை தானம் போன்ற வழிபாடுகளை செய்வது வழக்கம்.அமாவாசையில் மஹாளய அமாவாசை மிகவும் குறிப்பிடத்தக்கது.
மஹாளயபட்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் சந்திர மாதப்படி பாத்ரபதம் (தமிழ்படி ஆவணி, புரட்டாசி மாதங்களில் வரும்) பவுர்ணமிக்கு அடுத்த நாளானபிரதமை முதல் அமாவாசை வரை 15 தினங்களுக்கு தேய்பிறையில் இறந்த பித்ருக்கள் பூமிக்குவருகிறார்கள் என்று நம்பப்படுகிறது.இறந்து போனவரின் திதிதெரிந்தால் மாளயபட்சத்தில் வரும் அந்த திதி தினத்தன்றும், தெரியாவிட்டால் மஹாளய அமாவாசைதினத்தன்றும் பித்ருக்கள் நற்கதி அடைய பூஜை செய்யவேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.
மஹாளயஅமாவாசை தினத்தன்று பித்ருக்கள், குறிப்பாக ஆயுதம் மூலமாககொல்லப்பட்டோ, தற்கொலை செய்து கொண்டோ, அல்லது விபத்து மூலமாக அகாலமரணடைந்து போனபித்ருக்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக பூஜைசெய்யும்நாளாகும்.
மஹாளய அமாவாசை தினத்தன்று உணவிற்காக ஏங்கும் மனிதனுக்கும்,ஆதரவற்றோர் இல்லங்களுக்கு, வேதபாடசலையில் பயிலும் மாணவர்களுக்கு அன்னதானம் செய்வதுதான்மிக சிறந்தது என்று உபநிடதங்களும், வேதங்களும், சாஸ்திரங்களும் வலியுறுத்துகிறது.
"தர்பணம் செய்து வைக்கும் பிராமணர்களுக்கு தருவது சம்பளம்(சம்பாவனை) அது தானம், தர்மம் அல்ல"
வெளிநாடுகளில் உள்ளவர்கள்:
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தர்பணம் செய்யலாம்
தர்பணம் செய்ய இயலாதவர்கள் ஆத்ம சாந்தி வழிபாடு செய்யலாம்
பாரதத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அல்லது பூர்வீக கிராமத்து பள்ளிகளுக்கு கணணி வாங்கி தருதல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யலாம்
பழைய கணணி - கம்பியூட்டர் தானம்
தங்களிடம் உள்ள பழைய கம்பியூட்டரை மாளய பட்சத்தில் அருகில் உள்ள ஏழை மாணவர்களுக்கு தானம் செய்து புன்னியம் பெறுங்கள். மாணவனும் மகிழ்வான், தேசமும் அறிவார்த்த சமுதாயமாக மாறும்.
படிக்கும் வசதியற்ற மாணவர்கள் சிலருக்கு கணணி தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும், மாணவர்களின் முகவரி அளிக்கப்படும். நேரிடையாக தாங்களே தானம் செய்யலாம்.
Old Computer Donation : Please donate your Old used computer (Working Condition) to nearest poor students on Mahalaya patcham period or on Malya Amaavasai date.I have some poor student address those who requiring computer. Please contact me if you are interested to dentate.
தர்பண சங்கல்பம்: Sankalpam- மாளயம் அன்று சங்கல்பம் - தமிழாக்கம்
கலியுகம்:5111, விரோதி வருடம்(23ஆம் ஆண்டு), தட்க்ஷணாயனம்(சூரியன் தெற்கில் உதயம்), வருஷ ருது (மழைக்காலம்), புரட்டாசி மாதம் (சூரியன் கன்னி இராசியில் அதாவது 150 பாகை மேல் 180 பாகை உள்ளாக) வெள்ளிக்கிழமை (சுக்கிரன் கிரகத்தை குறிக்கும் நாள்) பூரம் நட்சத்திரம் (சந்திரன்133.20 – 146.40 பாகை இடையில் பயணிக்கும் நாள்), அமாவாசை திதி (சூரியனுக்கு அருகில் இணைப்பு நிலையில் சந்திரன் உள்ள நாள்)
சங்கல்பம் என்பது வானவியல் நிலைகளை வடமொழியில் கூறுவதாகும்
Tuesday, 15.9.2009 செவ்வாய் ஏகாதசி: அஜா : புரட்டாசி(பாத்ரபத) க்ருஷ்ணஏகாதசியை அஜா என்று சொல்வது.உலகத்தில் பிறப்புடையவன்துன்பமில்லாமல் இருப்பதுஅரிது. பிறந்ததுமே துன்பக்கடலில்மூழ்குவான். இது இயற்கை.இந்த ஏகாதசியில் வ்ரதம்இருப்பவன் ஏற்பட்ட துன்பங்களிலிருந்துவிடுபட்டு அஸத்ருசமானபுதுப்பிறவையை அடைவான்.எனவே இதற்கு அஜை எனப்பெயர்.அரிச்சந்திரன் வ்ருத்தாந்தம்நாம் அறிந்ததே. ராஜ்யத்தைஇழந்தவன் மனைவி மக்களைத்துறந்தான். தானும் ஒருசண்டாளனிடம் அடிமையாய்இருந்தவன். இப்படி பலஅல்லல்களுக்குஆளானவன். இவனை கெளதம முனிவர்கண்டார்.இரக்கம் கொண்டார். இந்தஏகாதசியில் வ்ரதமிருந்தால்துன்பங்கள் அகலும் என்றார்.இதன்படி இவன் நடந்தான்.மனைவியையும் மக்களையும்இராஜ்யத்தையும் பெற்றான்.எனவே இதில் உபவாஸம் இருப்பவன்இழந்தவைகளைப்பெற்றுஸுகமடைவான்.
நவராத்திரி:
மாளய அமாவாசை மறுநாள் சனிக்கிழமை 19.9.2009 முதல் நவராத்திரி கொலு பண்டிகை துவங்கி திங்கள் 28.9.2009 விஜய தசமி அன்று முடிவடைகிறது. இவ்வருடம் நவராத்திரி பண்டிகைகள் முழுமையாக உள்ளது.
சரஸ்வதி பூஜை: ஞாயிறு 27.9.2009 விஜயதசமி: திங்கள் 28.9.2009
தர்மம் தலைமுறை காக்கும்
ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் வேதபாடசாலை
ஆதீஸ்ரர் இல்லம் ஆதரவற்றோர் இல்லம் : 94444 85491
குட்லைப்சென்டர் (மன வளர்ச்சி குன்றியோர்): 2226 4151, 2226 4152
ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்பதை, ஜாதகத்தில் இராசி, நவாம்சம், பாவம் கட்டங்களில் லக்னம், சந்திரன், சுக்கிரன் இருக்கும் இடத்தில் இருந்து செவ்வாய் இருக்கும் இடத்தையும், மற்ற கிரகங்கள் பார்பதாலும், செவ்வாயுடன்மற்ற கிரகங்கள் சேர்க்கையும் கொண்டே முடிவெடுக்க வேண்டும். இதில் ஜாதகரின் பாவ கட்டம் செவ்வாய் தோஷத்தின் அளவினை கணிக்க மிக முக்கியமான பங்குவகிக்கிறது. எனவே ஜாதக புஸ்தகத்தில் பாவ கட்டத்தை இடம்பெறசெய்வது மிக முக்கிமாகும்.
கட்டத்தை பாரத்தவுடன் லக்னம், சந்திரன், சுக்ரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷம் என கண்ணை மூடிக்கொண்டு தவறாக கணித்து விடக்கூடாது, இதனால் நல்ல பொருத்தமான ஜாதகங்கள் கூட தட்டிவிடும், கிட்டத்தட்ட மருத்துவர் துணையின்றி மருந்துக்கடைக்கு சென்று மருந்து வாங்கி உட்கொள்வதற்கு சமமாகும்!
பொதுவாக செவ்வாய் தோஷம் இருப்பதாக தோன்றும் ஜாதகங்களை நேரம் ஒதுக்கி அதிக கவனம் தந்து தேவகேரளீயம், குமாரசுவாமியம், பலதீபிகா, ஜோதிட சிந்தாமணி ஆகிய கிரந்த நூல்களில் கூறியுள்ள தோஷ பரிகார காரண வாக்கிய சூத்திரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்த பின்னர் செவ்வாய் தோஷம் குறித்து முடிவுக்கு வரமுடியும்.
அதன் அடிப்படையில் தோஷம் இல்லை என்பதற்கான சில காரணங்களை இங்கு தந்துள்ளேன்
சந்திரனுடன் சேர்ந்தால் தோஷமில்லை.
செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகரம் இலக்னத்தில் இருந்தால் தோஷமில்லை.
செவ்வாய் தன் மித்திரர்களான சூரியன், சந்திரன், குரு இவர்கள் வீட்டில்-அதாவது சிம்மம், கடகம், தனுசு, மீனம் இந்த ராசிகளில் எங்காவது செவ்வாய் இருப்பின் தோஷமில்லை.
பரிகாரங்கள்:
1. அறவழி பரிகாரம்: வருடம் ஒருமுறை புதிய சிவப்பு நிற ஆடையை 3 எண்ணிக்கை ஆதரவற்றவர்களுக்கு தானம் செய்யலாம் அல்லது மாதந்தோரும் 1 கிலோ துவரம் பருப்பை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானமாக தரலாம்
2. ஆன்மீக வழி பரிகாரம்: அங்காரக தோஷம் உள்ளவர்கள் ஜென்ம நட்சத்திரம், செவ்வாய் கிழமை, சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம் இருக்கும் நாளில் முருகன் கோவிலுக்கு சென்று இறைவன் சன்னதியில் அமைதியாக திருப்புகழ், கந்தர் சஷ்டி கவசம், கந்தர் அநுபூதி, கந்தபுராணம், திருமுருகாற்றுப்படை நூல்களை மனமொன்றி மவுனமாக வாசிக்கவும்
3. வேள்வி வழி பரிகாரம் (இறுதியாக மட்டும்)
மேற்கண்ட அறவழி பரிகாரம்,ஆன்மீக வழி பரிகாரம் ஆகியவைகளை செய்தும் திருமண ஏற்பாடு மந்தமாக அல்லது தடை ஏற்படின் மட்டும் இல்லத்தில் ஜென்ம நட்சத்திரம் அன்று காலையில் நவக்கிரக ஹோமம் செய்யலாம்.
ஆவணி மாத நல்ல நாட்கள் தகவல் மற்றும் 6 ஆகஸ்ட் 2009 அன்று வரும் சந்திர கிரகணம் பற்றிய தகவல்களை இணைத்துள்ளேன். Here I attached details about Aavani Month auspicious days and forthcoming lunar eclipse (6 Aug 2009)
வீட்டின் உயிர்நாடியாக உள்ள நீர்ஆதாரமான கிணற்றினை மூடுவது என்பது மிகவும் கடினமான முடிவாகும். வேறுவழியின்றி நியாயமான காரணங்களுக்காக மூடுவது என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
வாஸ்து காரணங்களுக்காக மூடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும் அப்படியை மூடுவதாக இருப்பின் மற்றொரு கிணற்றை தோண்டியபின் பழைய கிணற்றை மூடவும்
கிணறும், பூஜை அறையும் வீட்டின் இரு கண்கள் போன்றது எனவே புதிய கிணற்றுக்கு பூஜை செய்து மண் எடுத்தபிறகு அந்த மண்ணை கொண்டு பழைய கிணற்றை முறைப்படி பூஜை செய்து மூடவும்
ஆழ்துளை கிணற்றை பாரம்பரிய கிணற்றுடன் ஒப்பிடவேண்டாம்! இட நெருக்கடி காரணத்தால் நகரங்களில் கிணற்றை மூடிவிட்டு ஆழ்துளை கிணற்றை அமைத்து வசிப்பிடத்தினை பெரிதாக்குகிறார்கள் இது நிலத்தின் மதிப்பை அறிந்து செய்வதாக கூறி கிணற்றின் மதிப்பை குறைப்பதாகும்.
நிலநடுக்கத்திற்கு பின்னர்
ஆழ்துளைகிணறு அமைப்பது எளிதாக தோன்றினாலும், நிலநடுக்கம், நிலஅதிர்வு நிகழ்ந்த உடன் ஆழ்துளை கிணறு முற்றிலும் செயலற்று அல்லது மிகவும் நீர்வரத்து குறைந்தும் போகும் என்பதுதான் உண்மை. இது தான் குஜராத்தில் நடந்தது.
பாரம்பரிய கிணற்றின் பல நீர்ஊற்று வழிகளில் சிலவற்றில் அடைப்பு ஏற்பட்டாலும் பெரும்பாலும் தண்ணீர் வரத்து குறைவதில்லை என்பதுதான் சிறப்பானதாகும்.
ஆழ்துளை கிணற்றைவிட பாரம்பரிய கிணற்றின் பயன்பாடுகாலம் மிகவும் அதிகம். நீர்வற்றுவது என்கிற காரணத்திற்காக மூடவேண்டாம் மாறாக மழைக்காலங்களில் "மழைநீர் சேகரிப்பு" கிணறாக பாவித்தால் மிகவும் பலனுள்ளதாகும்.
கிணறு மூடுதல் பூஜை
முன்னோர்கள் காலம்தொட்டு வீட்டின் கிணறு கங்கைக்கு ஈடாக மிகவும் புணிதமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட கிணற்றை மூடும் பொழுது வழிபாடு செய்வது என்பது அதற்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.
இலக்னம்: விட்டின் உரிமையாளர் மற்றும் அவரின் மணைவி நட்சத்திரத்திற்கு உகந்த ஒருநாளில் அஷ்டம சுத்தியுடன் இருக்கும் இலக்னம், ரிஷப, கடக, மகர, மீனம்
கிணற்றை முடும்முன் வீட்டில் உள்ள பிள்ளையாருக்கு வழிபாடு நடத்திய பின்னர் வெள்ளி, தங்கம், சில்லரைகாசுகள், கங்கைநீர். மஞ்சள்தூள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, அருகன்புல், துளசி, வில்வம், தர்பைபுல்,கோமயம் ஆகிய வற்றை கிணற்றில் போடவும் கிணறு மற்றும் சூரியனுக்கு தீபாராதனை காட்டிய பின்னர் ஒருபிடி மண்ணை கிணற்றில் போட்டு மூடும் பணியை துவக்கவும். அன்றைய தினம் காலை பசுவிற்கு கோதுமை தவிடு 2கிலோ மற்றும் வெல்லம் 250 கிராம் கலந்து தானம் செய்யவும். மேலும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒருவேளை உணவிற்கு உதவிடவும்.
Jupiter Retrogression and Auspicious wedding time – Vakra Guru Palan
வக்கிர குரு பலன் 2009
திருமணத்திற்கு உகந்த "குருபலன்" காலத்தினை ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரன் நின்ற இராசியில் இருந்து குரு கிரகம் இருக்கும் இடத்தை வைத்துதான் கூறமுடியும்.
இவ்வருடம் குரு கிரகம் நிராயண முறையில் (Sidereal Longitude ) 1 மே 2009 முதல் 30 ஜூலை 2009 வரை வக்கிர கதியாக (Retrogression) கும்ப ராசியில் ( Aquarius) வசிக்கிறார். பின்னர் மீண்டும் மகர ராசிக்கே( Capricorn) திரும்புகிறார்.
குரு வக்கிர கதியில் இருக்கும் பொழுதும் சில இராசிகளுக்கு தற்காலிகமாக திருமணத்திற்குரிய நல்ல சூழலை தருவார் இந்த கால கட்டத்தில் எடுக்கப்படும் திருமண முயற்சிகளும் பெரும்பாலும் வெற்றி தரும். இடையில் வரும் குரு வக்கிரத்தில் பெண்-பிள்ளை சம்மதம் தெரிவித்தவுடன், நிச்சிய்ம் செய்து குரு வக்கிர கதியில் முடியும் முன்னர் திருமணம் செய்தல் நன்று. அப்படி இயலாத நிலையில் குரு முழுமையாக நல்ல பலன் தரும் காலத்தில் திருமணத்தை நடத்தல் மிகநன்று.
பொதுவாக திருமண காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் "குரு பலன்" இருப்பது மிகநல்லது, ஆனால் சில தம்பதிகளுக்கு அப்படி அமைவதில்லை அப்படிப்பட்டவர்கள் மட்டும் பரிகார தானங்களை (ஆதரவற்றோர் இல்லங்களுக்கு) செய்து பின்னர் திருமணத்தை நடத்தலாம். திருமணத்தில் அதிக முக்கியத்துவம் பெண்ணுக்குத்தான் தரப்படுகிறது, ஜாதகங்களும் பெண்ணுக்கு ஆண் பொருந்துகிறானா என்றுதான் கணிக்கப்படுகிறது. திருமண முகூர்த்த கணண விதானத்தில் தாராபலன், சந்திரபலன் எல்லாம் கண்டிப்பாக பெண்ணுக்கு இருத்தல் வேண்டும்.
ஆண், பெண் ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,11ல் குரு இருக்கும் காலம் திருமணத்திற்கு உகந்த மிக நல்ல காலம் ஆகும். அந்த வகையில் தற்பொழுதய குரு வக்கிர காலகட்டத்தில் மேஷம், மிதுன, சிம்மம், துலாம், மகர ராசிகளுக்கு திருமணம் கூடிவரும்.
ஆண்களுக்கு திருமணம் நடைபெற சூரியனின் பார்வைதான் மிக முக்கியமானதாகும். அடுத்த முக்கியத்துவம் தான் குருவிற்கு தரப்படுகிறது. ஆணின் சந்திரன் நின்ற ராசிக்கு சூரியன் 3,6,11ல் வசிக்கும் காலமே திருமணத்திற்கு உகந்த காலம் ஆகும். அதே நேரத்தில் குருவின் பார்வைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு திருமணம் நடத்துதல் மிகவும் சிறப்பானதாக அமையும்.
குரு பலன் இருந்தால் தோஷம் உள்ள ஜாதகத்தினரின் திருமணமும் தடை நீங்கி கூடும்.
பரிகாரங்கள்:
வியாழன் கிழமைகளில் குளத்துடன் உள்ள ஆகம முறையிலான சிவன் கோவிலில் இருக்கும் தட்சக்ஷிணா மூர்த்தி அல்லது குரு கிரகத்திற்கு முன் அமர்ந்து தட்க்ஷிணா மூர்த்தி ஸ்லோகம், குரு காயத்ரி மந்திரங்களை ஜபிக்கவும்.
ஆதரவற்றோர் இல்லத்திற்கு மூக்குகடலை 2கிலோ வாங்கி தரவும். ஜென்ம நட்சத்திரம், ஜென்ம வாரத்தில் மஞ்சள் நிற ஆயத்தஆடைகளை (Ready Made Dress) வாங்கித்தந்து தானம் செய்யவும்
பரிகாரங்கள் தர்ம சிந்தனை அடிப்படையில் அமைந்தால் பலன் நிச்சியம் உண்டு
ஆண் மற்றும் பெண் இருவருக்கும் வக்கிர குரு(Retrogression) மற்றும் நேர் குரு(Direct) பலன்(சந்திரன் நின்ற இராசிக்கு) .................இது குறித்து மேலும் முழு தகவல் அறிய www.prohithar.com
தோற்றப்பொலிவு புவி மையக்கோட்பாட்டின்அடிப்படையில் நிராயண சூரியன் பரணி நட்சத்திரத்தில் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் காலம் முதல் ரோகினி நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் பிரவேசிக்கும் காலம் வரை கத்திரி நாட்களாகும்.
Sun Sidereal longitude from 20o00' to Sidereal longitude 13.20 (43o20') days are called Agni Nakshtra – Kathiri. This year falls on 4th May 2009 and ends on 28th May 2009
இவ்வருடம் கத்திரி: திங்கள் 4 மே 2009 மதியம் 1:21 மணி முதல் வியாழன் 28 மே 2009 மாலை 6:15 வரை. இதில் சித்திரை மாதத்தின் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களும் மிக அதிக வெப்ப நாட்கள் என்று பாரதீய வானியலாளர்கள் கணித்து அதற்கு அக்னி நட்சத்திர உச்ச நாட்கள் என்று அழைத்தார்கள்
கத்திரி காலத்தில் வரும் அக்னி நட்சத்திர உச்சகாலம் என்று அழைக்கப்படும் 8 மே முதல் 21 மே வரை மிக வெப்பகாலம் ஆகும். கத்திரியில் சில விசேஷங்களை மட்டும் தவிர்க்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது.
கத்திரி காலத்தில் செய்ய தகுந்தவை:
திருமணம், நிச்சியம், பெண்-மாப்பிள்ளை பார்த்தல், உபநயனம், பொது கட்டிடங்கள்(சத்திரங்கள், அரசு கட்டிடங்கள்) கட்டுதல், பரிகார ஹோமங்கள் போன்றவை செய்ய தகுந்தவையாகும்
கத்திரி காலத்தில் செய்யக்கூடாதவை:
மொட்டை அடித்தல், நிலம் தோண்டுதல், வீடு கட்ட துவக்கம், மரங்கள், செடிகள் வெட்டுவது, தோட்டம் அமைப்பது, விதை விதைத்தல், புதிய குடியிருப்பு பகுதி அமைப்பது(பிளாட் போடுவது) போன்றவை செய்யக்கூடாது
அறிவியல் பார்வை:
பூமி 23.5 பாகை சாய்வான நிலையில் சீரான அச்சில் சூரியனை நீள் வட்டபாதையில் சுற்றுகிறது அப்படி சுற்றும் பொழுது பூமியின் வடபுலம் (Northern Hemispheres)6 மாதங்களும் அடுத்து தென்புலம்(Southern Hemispheres) 6 மாதங்களும் சூரியனின்ஒளி விழும் வகையில் உள்ளது நேராக சூரியன் விழும் காலம் கோடை என்றும், சாய்வாக சூரியனின்ஒளி விழும் காலம் குளிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய மாற்றமே புவியின் பருவநிலை மாற்றத்தின்முக்கிய காரணியாகும்
The seasons are caused by a combination of things. The Earth is tilted (23.5 Degree) as it moves around the sun. Direct sunlight produces more heat than the indirect light. Direct sunlight days are called as summer where the heat will be maximum which are known as "Agni Nakstra – Kathiri "
இதில் சூரியனின்கதிர் நேர்கோணத்தில் விழும் காலமே கத்திரி ஆகும். இக்காலத்தில் சூரியனின் மிக அதிக பட்ச வெப்பம் பூமியின் மீது தாக்கும். (படம் காண்க)
சனிப்பெயர்ச்சி திருக்கணித முறைப்படி இவ்வருடம் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி புதன் கிழமை நள்ளிரவு 12:00 மணி (வியாழன் கிழமைஅதிகாலை00:00மணி)அளவில் இந்திய முறைப்படி விரோதி வருடம் ஆவணி மாதம் 24ஆம்தேதி புதன் கிழமை சிம்ம இராசியில் இருந்து கன்னி இராசிக்குள் நுழைகிறார். சனிபகவான் 2009 மற்றும் 2010 ஆண்டுகள் முழுவதும் கன்னி இராசியில் மட்டும் சஞ்சரிக்கிறார்.
சனிக்கிரகம் கோள்நிலை விவரம் ( நேரம் காலை 5:29 மணி அளவில்) இந்திய மத்திய நேரம்
Geocentric (Sayana) and Sidereal (Nirayana) Longitude of SATURN at 5h 29m IST
தேதி
சாயணம்
நிராயணம்
இராசி
நட்சத்திரம்
09-9-2009
173 54 03.4
149o 54' 15''.4538
சிம்மம்
உத்திரம் முதல் பாதம்
10-9-2009
174 01 30.2
150o 01' 42''.1154
கன்னி
உத்திரம் இரண்டாம் பாதம்
ஒரு இராசியில் சனியின் ஆட்சிகாலம் சுமார் இரண்டரை ஆண்டுகளாகும். நவக்கிரகங்களிலையே சனிதான் நீண்ட கால சுற்றுப்பாதை உடையவர் சூரியனை ஒரு சுற்று (12 இராசிகளை) சுற்றிவர சுமார் 30 ஆண்டுகள்(மிக துல்லியமாக 29.46 வருடம்) எடுத்துக்கொள்கிறார். சனிகிரகத்தின் 4 சுற்றுக்கால முடிவு அதாவது 120 ஆண்டுகள்தான் மனிதனின் முழு ஆயுட்காலமாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது, இதனால் சனிக்கிரகத்தை ஆயுட்காரகன் என்றும் கூறுவர்.
சனிப்பெயர்ச்சி பலன் கணிப்பு முறை
சனிக்கிரகம் பெயர்ச்சி அடையும் பலனை ஜென்ம லக்னம், சந்திரன்நின்ற இராசி (சந்திர இலக்னம்) மற்றும் நடப்பு தசா புக்தி, கோசாரம்(நடப்புகோள் நிலை) என்ற 3 நிலைகளின் அடிப்படையில் கணித்தால் தான் முழு பலன் அறிய முடியும், ஆனால் இம்முறையில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பலன்சொல்வது என்பது நடைமுறையில் இயலாததாகும்.எனவே இங்கு சந்திரன் நின்ற இராசிக்கும், கூடுதல் சிறப்பு கவனத்துடன் நட்சத்திரங்களுக்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளன.
சனி பார்வை, சனி நிலையால் பலன்
சந்திர இலக்னத்திற்கு 3, 7, 11 ஆம் இடங்களில் சனி இருப்பின் நன்மை
சந்திர இலக்னத்திற்கு 12, 1, 2 ஆம் இடங்களில் சனி இருப்பின் ஏழரை ஆண்டுகள் கடினமான காலம்
சந்திர இலக்னத்திற்கு 4,8 ஆம் இடங்களில் சனி இருப்பின் தீமை
சந்திர இலக்னத்திற்கு 5,7,9,10 ஆம் இடங்களில் சனி இருப்பின் நன்மை தீமை கலந்தும்
மீனம்
7
மேஷம்
6
ரிஷபம்
5
மிதுன
4
கும்ப
8
இராசி நிலை
10-9-2009
காலை 5:30
கடக
3
மகர
9
சிம்ம
2
தனூர்
10
விருச்சி
11
துலா
12
கன்னி
சனி
ஒருவருக்கு வாழ்நாளில் சனி கிரக சுற்று(பர்யாயம்) முதல் முறையாக, இரண்டாம் முறையாக (25 வயதுக்கு மேல்) மற்றும் மூன்றாம் முறையாக 50 வயதுக்கு மேல் வரும் பொழுது அதன் தாக்கம் வேறுபடும்