காரடையார் நோன்பு வழிபாடு நேரம்
முழு தகவலுக்கு கீழ்கண்ட இணைப்பை பார்வையிடவும்
http://www.prohithar.in/vikruthi/KarudaiyanNonbu2011.pdf
காரடையான் நோன்பு 2011, 2012, 2013, 2014
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Web: http://www.prohithar.com
புரோகிதர் - ஜோதிடர், வானசாஸ்திரம், பஞ்சாங்க கணணம். Prohithar, Progithar, Tambaram Astrologer, Vakya Panchangam, Thirukanitha Tamil Panchangam எண் 9, 4வது தெரு, கல்யாண் நகர், தாம்பரம் மேற்கு, சென்னை 45. கைபேசி : 91 98403 69677, இல்லம் : 91 44 2226 1742 மின் அஞ்சல் : prohithar@gmail.com இணையம் : http://www.prohithar.com http://www.thanigaipanchangam.com
காரடையார் நோன்பு வழிபாடு நேரம்
முழு தகவலுக்கு கீழ்கண்ட இணைப்பை பார்வையிடவும்
http://www.prohithar.in/vikruthi/KarudaiyanNonbu2011.pdf
Panguni Auspicious dates and time
பங்குனி மாத சுப நாட்கள்
http://www.prohithar.in/vikruthi/panguni2011.pdf
பங்குனி - மாலை நேர நல்ல நாட்கள் (நிச்சிய தாம்பூலம், மஞ்சள் நீராட்டு விழா நடத்திட )
பங்குனி மாத சிறப்பு நாட்கள்
சித்திரை மாதம் 2011 - மாலை நேர முகூர்த்தம் நிச்சிய தாம்பூலம், மஞ்சள் நீராட்டு விழா, வரவேற்பு, அரங்கேற்றம்
சித்திரை மாதம் 2011 - காலை நேர முகூர்த்தம்
வைகாசி மாதம் கர வருடம் காலை நேர முகூர்த்தம்
கர வருஷம் சித்திரை பிறப்பு: 14.4.2011 வியாழன்
March Equinox 2011
சிங்கப்பூரில் கர - நந்தன வருடத்தில் ஒரு நாள் கூடுதலாக இருக்கும்
விரிவான தகவலுக்கு
www.prohithar.in/kara2011/Singapore_Nandana_Varusham_pirappu.pdf
இதனால் அடுத்த ஆண்டு நந்தன (2012 -2013) வருட பிறப்பில் வேறுபாடு உள்ளது
சிங்கப்பூரில் கர வருட கடைசி நாள் பங்குனி மாதம் 31 (April 13, 2012)
சூரிய உதயம்: Sunrise at 7:05*, Sunset at 19:06
சந்திர உதயம்: Moonrise at 1:40*, சந்திர அஸ்தமனம்: Moonset at 13:01,
சிங்கப்பூர் நேரப்படி 13.4.2012 அன்று இரவு 7:30 மணி (33 நாழிகை) மேல் வாக்கியம்(பாம்பு பஞ்சாங்கம்) அடிப்படையில் சூரியன் (அஸ்தமனத்திற்கு) பிறகு மேஷத்தில் பிரவேசிக்கிறார் எனவே மறுநாள் 14.4.2012 அன்று தான் உண்மையான தமிழ்வருட பிறப்பாக கணிக்கிடவேண்டும்.
ஆரிய சித்தாந்தம், வரருசி வாக்கியம், பரகிதம், சூரிய சித்தாந்தம், திருக்கணிதம் முறைப்படியும் சிங்கப்பூரில் 14.4.2012 சனிக்கிழமை அன்று தான் உண்மையான தமிழ்வருட பிறப்பாகும்.
இதனால் சிங்கப்பூரில் வரும் கர வருஷத்தில் பங்குனி மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக இருக்கும்
சிங்கப்பூரில் நந்தன 2012-2013 தமிழ் வருஷம் பிறப்பு
சித்திரை முதல் நாள் 14.4.2012 சனிக்கிழமை நந்தன வருஷம் சித்திரை 1
வேண்டுகோள்:
தமிழகத்தில் வெளியிடப்படும் பஞ்சாங்கத்தை அப்படியே சிங்கப்பூரில் வருஷப்பிறப்பு விஷயத்தில் மட்டும் பயன்படுத்த இயலாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வரருசி வாக்கிய கரணம் மற்றும் பல மூலகிரந்த நூல்களை படித்தும், பஞ்சாங்க கணிதக்ஞர்களை கலந்து நன்கு ஆய்வு செய்த பின்னர் உறுதியான தகவல் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தகவல் மலேசியாவிற்கும் பொருந்தும்.
விரிவான தகவலுக்கு
www.prohithar.in/kara2011/Singapore_Nandana_Varusham_pirappu.pdf
25.2.2011
Thai month auspicious dates and time, Pongal Prayer Time
http://www.prohithar.com/vikruthi/thai2011.pdf
http://www.prohithar.com/vikruthi/pongal2011.pdf
தைமாத பிறப்பு, சிறப்பு தொடர்பாக
http://www.prohithar.com/vikruthi/thai2011.pdf
http://www.prohithar.com/vikruthi/pongal2011.pdf
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
34th CHENNAI BOOK FAIR - 2011
Daily Events
தினசரி நிகழ்ச்சி நிரல்
|
http://www.prohithar.com/vikruthi/karthigai_deepam_2010.pdf
Here I attached detailed information on karthigai deepan festival
http://www.prohithar.com/vikruthi/karthigai_deepam_2010.pdf
சிறப்பு பார்வை:
விளக்கொளி பெருமாள் கோவில் - காஞ்சிபுரம்
புத்திர பாக்யம் தரும் புத்திரன் கோட்டை கோவில் - புத்திரன் கோட்டை(மதுராந்தகம்)
மேலும் சுவையான தகவல்களுடன்.....
http://www.prohithar.com/vikruthi/karthigai_deepam_2010.pdf
Here I attached detailed information on karthigai deepan festival
http://www.prohithar.com/vikruthi/karthigai_deepam_2010.pdf
Online Numerology Counter
இணைய பெயர் எண்ணியல் கணிப்பான்
இதன்மூலம் தங்களின் பெயருக்குரிய எண்ணை எளிதில் அறியலாம்
பெயர் எண்ணியலுக்காக சிறப்பான ஒரு பக்கம்
http://www.prohithar.com/Numerology/index.html
பாலு சரவண சர்மா
Astrologer, Indian Astrology, Numerologist, Vedic Astrology,
Nameologist,Numerology,
Nameology, Vastu
மேலும் விளக்கம் அறிய
இணையம்: http://www.prohithar.com/downloads/webdeepavali2010.pdf
Diwali 2010, Deepavali 2010, Naraga Chathurthi 2010
சரஸ்வதி பூஜை 16.10.2010 சனிக்கிழமை
உலகை காக்க அவதாரம் எடுத்த ஜகன்மாதா பராசக்தியை நவராத்திரி 9 நாட்களில் லட்சுமி, சரஸ்வதி, காளியாக வழிபட்டு கடைசி நாளில் மகா நவமி அன்று சரஸ்வதி பூஜை என்றும் ஆயுத பூஜை என்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. வடமாநிலங்களில் காளி பூஜையாக வழிபாடு செய்ப்படுகிறது
சரஸ்வதி பூஜை அன்று நமது தொழில் கருவிகள், கணக்கு புத்தகங்கள், பள்ளி புத்தகங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வைத்து சரஸ்வதி படத்திற்கு வெள்ளை மலர்கள்(மல்லி, சம்பங்கி, வெண்டாமரை) கொண்டு அலங்காரம் செய்து, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி படித்து நெய்வேதியம் செய்து தீபாரதனை செய்ய வேண்டும் முடிவில் உலக நண்மை, தொழில், அறிவு மேன்மை அடைய பிரார்த்தனை செய்திடல் வேண்டும்.
சரஸ்வதி பூஜையில் புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வழிபட்டு மறுநாள் படித்தல் மிகவும் விசேஷமானது.
சரஸ்வதி பூஜை வழிபாடு நல்ல நேரம்
மிக நல்ல நேரம்(அஷ்டம சுத்தியான நல்ல நேரம்)
காலை 6:30 - 8:00
மதியம் 12:30 - 1:20
மாலை 5:00 - 6:00
மாலை 6:30 - 7:30
சரியான இராகு காலம் காலை 8:56 - 10:25
சரியான எமகண்டம் மதியம் 1:23 - 2:52
100 கிராம் நவதான்யத்தை நன்கு ஊரவைத்து, அதில் 1 கிலோ கோதுமை தவிடு, 100 கிராம் வெல்லம் கலந்து குதிரை அல்லது பசுவிற்கு தானம் செய்வது மிகவும் புன்னியமானது.
விஜய தசமி 17.10.2010 ஞாயிறு
மறுநாள் பூஜையில் வைத்த புத்தகத்தை எடுத்து படிக்கவும், தொழில் கருவிகளை கொண்டு தொழிலை துவக்குவது மிகவும் நன்மை தரும். சிறுவர்கள் பள்ளி பாட புத்தகத்தை விஜயதசமியில் படிப்பது மிகவும் பலன்தரும், சரஸ்வதி கடாக்ஷத்தால் அறிவும், கல்வியும் மேம்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள்.
விஜய தசமி அன்று தொழில் துவக்க, புத்தகம் படிக்க நல்ல நேரம்
காலை 5:30 - 6:30, 9:00 - 9:50, 11:00 - 11:50
சிறுவர்களை பள்ளியில் சேர்க்க 9:00 - 9:50
தேதி: 7.10.2010 வியாழன்
நேரம்: 7:30 மணி முதல் பகல் 1 மணி வரை
இடம்: பழைய தாம்பரம் குளம்
நோக்கம்:
வணிக நோக்கம் இன்றி தர்ம அடிப்படையில் மூதாதையர் வழிபாடு
5 ரூபாயில் தர்பணம்(பெண்கள், பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு)
15ரூபாயில் தர்பணம் (+10ரூபாய் ஆதரவற்ற இல்லங்களுக்கு தானம்)
அரசு பள்ளிக்கு பொருளுதவி
ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி
இலவசமாக மூதாதையர் திதி அறிந்து கூறுதல்
மேலும் அன்றைய தினம் தானமாக வரும் உணவுப்பொருட்கள் பெரும்பங்கு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தரப்படும்.
புரோகிதருக்கு தரும் பணம் அவரின் பணிவிடைக்கு தரும் சம்பளம் (சம்பளம்)
அதை தர்மம், தானம் என தவறாக புரிந்துக்கொள்ளக்கூடாது!
தானமும், தர்மமும் சரியான நபருக்கு அடைவதே எமது எண்ணம்
மஹாளய அமாவாசை 7.10.2010 வியாழன் கிழமை
Malaya Amavasai 2010, 2011, 2012
Malaya patcham - Malaya amavasai
மாளயபட்சம் - மாளய அமாவாசை
சந்திர மாத அடிப்டையில் பாத்ரபத மாஸ - பகுள பட்சம் (தேய்பிறை) காலமும் அதன் முடிவில் வரும் அமாவசை மஹாளய அமாவாசை எனப்படும். இது தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதத்தை ஒட்டியும், சில வருடங்களில் ஆவணி மாத இறுதியிலும் வரும்
மஹாலயம் என்றால் மஹான்களின் இருப்பிடம் என்று பொருள். நமது முன்னோர்கள் பூமியில் 16 நாட்கள் தங்கி தனது சந்த திகளுக்கு நன்மை செய்ய ஆசிர்வதிக்கும் காலம் இது.
இக்காலத்தில் எமதர்மன் மறைந்த நமது முன்னோர்களை அவர்கிளின் பெற்றோருடன் பூமிக்கு செல்ல அனுமதியளித்து அக்காலத்தில் பூமியில் உள்ள மகன்கள், மகள்கள் அளிக்கும் தர்பணம், தானம் மூலமான உபசாரங்களை எற்க கட்டளையிடுகிறார்.
இக்காலத்தில் உணவளிக்கமாட்டார்களா என மறைந்த மூதாதையர் ஏங்குவார்கள். அவர்களின் ஆத்மாசாந்திக்காக அன்னதானம் செய்வது மிக அவசியமானது
மாளயத்தில் அன்னரூபமான சிரார்தம் மிகவும் சிறப்பானது. அதை செய்ய இயலாதவர்கள் அன்னதானம் செய்யலாம்.
குறிப்பு:
மாளயத்தில் தர்பணம் செய்துவைக்கும் பிராமணருக்கு தரும் பணம் சம்பளம் (சம்பாவனை) ஆகும் அது தானம் அல்ல!
அவரின் கடமைக்கு தரும் பணத்தை தானம் என்று தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம்.
எனவே தானத்தை தனியாக சரியான வழியில் செய்யவேண்டும்.
மாளயபட்சம்:
மாளயபட்சம் வெள்ளி 24.9.2010 முதல் துவங்கி வியாழன் 7.10.2010 அன்று மாளய அமாவாசையில் முடிவடைகிறது. மாளயத்தில் வரும் திதி, நட்சத்திரம், யோகம் அடிப்படையில் தர்பணம், தான தர்மம் வழிகளில் முன்னோர்களை வழிபட மிகவும் உன்னதமான நாட்கள் கீழே தரப்பட்டுள்ளது
மஹாபரணி: 27.9.2010 திங்கள்
மஹா வியதீபாதம்: 30.9.2010 வியாழன்
மத்யாஷ்டமி: 01.10.2010 வெள்ளி
அவிதவா நவமி: 02.10.2010 சனி
துறவு பூண்டவர்களுக்கு - சந்நியாஸ மஹாளயம்: 4.10.2010 திங்கள்
விதவைகளுக்கு - கஜச்க்ஷமய மஹாளயம்: 5.10.2010 செவ்வாய்
விபத்து, அகால மரணம், துர்மரணம்: சஸ்தரஹத மாளயம்: 6.10.2010 புதன்
மாளய அமாவாசை வியாழன் 7.10.2010
மஹாளய அமாவாசை அன்று பஞ்சாங்கம்
பகல் பொழுது(அகஸ்), சூரிய பிம்ப மத்திமத்திற்கு +3 நிமிடம் வேறுபாடு
சூரிய உதயம் 5:58 சூரிய அஸ்தமனம் 5:55
இராகு காலம்: மதியம் 1:26 மணி முதல் மதியம் 2:55 மணி வரை
எமகண்டம்: காலை 5:58 மணி முதல் காலை 7: 27 மணி வரை
சங்கல்பம்:
திருக்கணிதப்படி (தமிழகத்திற்கு மட்டும் பொருந்தும்)
விக்ருதி வரஷம், தக்ஷ்ணாயனம், வர்ஷ ருது, பாத்ரபத(அல்லது கன்யா) மாஸம், அமாவாஸ்ய திதி, உத்திர பல்குனி நட்சத்திரம்(காலை 7:42 வரை பின்னர் அஸ்தம் நட்சத்திரம், பிராம்யம் யோகம்(மதியம் 1.07 வரை பின்னர் ஐந்திரம் யோகம்), சதுஷ்பாதம் கரணம். குரு வாரம்
வாக்கியப்படி (தமிழகத்திற்கு மட்டும் பொருந்தும்)
விக்ருதி வரஷம், தக்ஷ்ணாயனம், வர்ஷ ருது, பாத்ரபத(அல்லது கன்யா) மாஸம், அமாவசை திதி, உத்திர பல்குனி நட்சத்திரம்(காலை 8.10 வரை பின்னர் அஸ்தம் நட்சத்திரம், பிராம்யம் யோகம்(மதியம் 2.30 வரை பின்னர் ஐந்திரம் யோகம்), சதுஷ்பாதம் கரணம். குரு வாரம்
அடுத்த வரும் மாளய அமாவாசைகள்:
வாக்கியம், திருக்கணிதம், சூரிய சித்தாந்தம் முறைகள்
27.10.2011 செவ்வாய்
15.9.2012 சனிக்கிழமை அன்று வரும் அமாவாசை அதிக பாத்ரபத அமாவாசை இதை கணக்கில் கொள்ளக்கூடாது
15.10.2012 திங்கள் கிழமை நிஜபாத்ரபத அமாவாசையே மாளய அமாவாசை
தானம்
கோமாதா:
மாளைய பட்சத்தில் தினமும் காலையில் பசுமாட்டிற்கு 2 கிலோ தவிடு, வெல்லம், உறுவிய அகத்திகீரை ஆகியவற்றை கலந்து ஊறவைத்து காலையில் தானம் செய்யவும்.
மாளய பட்சத்தில் ஏதேனும் ஒருநாளில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்யலாம்.
வேதம் கற்பிக்கும் வேதபாட சாலைகளுக்கு மாளைய பட்சத்தில் உதவிசெய்வது மகா புண்ணியமாகும்
காஞ்சி ஸ்ரீசங்கரமட வேத பாடசாலை: +91 44 2722 2115 ( www.kamakoti.org )
ஸ்ரீஸீதாராம குருகுலம் வேதபாடசாலை: +91 44 24361210 (www.vedicgurukulam.com )
சிவாகம வேதபாடசாலை:+91 9444312367
அஹோபிலமட வேதபாட சாலை:+91 44 22397587
ஸ்ரீ சாந்தீபனி வேதபாட சாலை:+91 44 24895875 (www.madhuramurali.org )
தேவார பாடசாலை(தமிழ் வேதம்):+91 9345566947 (www.thevarapadasalai.com )
ஆதரவற்றோர் இல்லங்கள்:
ஆதீஸ்ரர் இல்லம் ஆதரவற்றோர் இல்லம் : 94444 85491
குட்லைப்சென்டர் (மன வளர்ச்சி குன்றியோர்): 2226 4151, 2226 4152
அக்ஷ்யா ஆதரவற்ற முதியோர் இல்லம்: 2276 1658, 98410 08325
சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லம்: 94444 94657, 94448 08915
பவுஷ்ய தீபம் ஆதரவற்ற மனவளர்ச்சி குன்றியோர் இல்லம்: 2276 1889, 94440 00889
உதவும் உள்ளங்கள் (ஆதரவற்ற குழந்தைகள்): 2226 0612, 6544 6378
ஸ்ரீ சாரதா சக்தி பீடம் ஆதரவற்ற சிறார் இல்லம், பள்ளி: 2276 0612, 2233 3214
மாளைய பட்சம் அன்ன தானம் செய்ய மிகவும் உகந்த காலம் ஆகும்
மாளய பட்ச திதிகளில் தர்பணம் செய்யும் பலன்கள்
பிரதமை: செல்வம் பெருகும் (தனலாபம்)
துவிதியை: வாரிசு பெருகும்(வம்ச விருத்தி)
திருதியை: நல்ல விவாஹ சம்பந்தம்(வரன்) கிட்டும்
சதுர்த்தி: பகைமை விலகி, எதிரிகள் தொல்லை
பஞ்சமி: விரும்பிய பொருள் கிடைக்கும்(ஸம்பத்து விருத்தி)
சஷ்டி: மனதில் தெய்வீக தன்மை மேலோங்கும் (மற்றவர்கள் நம்மை போற்றுவார்கள்)
சப்தமி: மேலுலகம் (பரலோக) ஆசிர்வதிக்கும்
அஷ்டமி: உயரிய அறிவை தரும்(புத்தி)
நவமி: ஏழுப்பிறவிக்கும் நல்ல மனைவியை(கணவனை) தரும்
தசமி: விருப்பங்கள் தடைநீங்கி விரைவில் கிட்டும்
ஏகாதசி: வேத வித்தைகள், கல்வி, கலைகள் கிடைக்கும்
துவாதசி: தங்கம், வைர ஆபரங்கள் சேரும்
திரியோதசி: நல்ல குழந்தைகள், மேதை, கால்நடைச்செல்வம்,நீண்ட ஆயுள்
சதுர்தசி: முழுமையான இல்லறம் (கணவன் - மணைவியுடன் நல்ல வாழ்க்கை)
அமாவாசை: மூதாதையர், ரிஷிகள், தேவர்கள் ஆசிர்வாதம்
Pdf format
Malaya patcham - Malaya amavasai
மாளயபட்சம் - மாளய அமாவாசை
Mahalaya Amavasai 2010, 2011, 2012
© காப்புரிமை 2010 - 28 செப்டம்பர் 2010
விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு நேரம்
11.9.2010 சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று திருக்கணிதப்படி சதுர்த்திதிதியில் பஞ்சமிதிதி தொட்டுக் கொண்டிருப்பதும் பகலில் சித்திரை நட்சத்திரம் அபாரண காலத்தில்(படையல் போடும் காலம்) வியாபித்திருந்து, சனிக்கிழமையில் வருகை தந்துள்ளது மிகவும் சிறப்பானதாகும்.
வழிபாட்டு நேரம்
விநாயகர் சதுர்த்தி அன்று(11.9.2010) காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்கு முன்னர் இலக்னத்தில் சந்திரன்இருக்க, லக்னம் சித்திரை நட்சத்திரத்தின் வழியாக பயணிக்கும் காலம் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த காலம் ஆகும். அந்த நேரத்தில் 7ஆம், 8ஆம் (அஷ்டம சுத்தி) இடம் சுத்தமாக இருப்பதால் இல்லறத்தில் தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டு நன்மை கிட்டும், நோய் நீங்கி ஆயுள் விருத்தியடையும்.
மேற்படி நேரத்தில் வழிபட இயலாதவர்கள் காலை 10:30 மணிக்கு மேல் மதியம்12 மணிக்கு முன்னதாக சுப ஹோரையில் வழிபடுதல் நன்று.
சுபம்
Aani Month auspicious dates
ஆனி மாத சுப நாட்கள்
http://www.prohithar.com/vikruthi/Aani2010.pdf
பகுதி சந்திர கிரகணம் 26.6.2010 முழுதகவல்
Partial Lunar Eclipse 26.6.2010 details
http://www.prohithar.com/vikruthi/chandra_grhanam_26062010.pdf
Web: http://www.prohithar.com