Pages

Monday, October 04, 2010

வணிக நோக்கம் இன்றி தர்ம சிந்தனையுடன் மாளய அமாவாசை கூட்டு தர்பணம்

தாம்பரம் பரம்பரை புரோகிதர்கள்( கோவில் பூஜை செய்யாதவர்கள்) இணைந்து மாளய அமாவாசை தர்பணத்தை தர்ம அடிப்படையில் செய்ய உள்ளோம்.

தேதி: 7.10.2010 வியாழன்

நேரம்: 7:30 மணி முதல் பகல் 1 மணி வரை

இடம்: பழைய தாம்பரம் குளம்

    

 

நோக்கம்:

     வணிக நோக்கம் இன்றி தர்ம அடிப்படையில் மூதாதையர் வழிபாடு

     5 ரூபாயில் தர்பணம்(பெண்கள்,  பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு)

     15ரூபாயில் தர்பணம் (+10ரூபாய் ஆதரவற்ற இல்லங்களுக்கு தானம்)

     அரசு பள்ளிக்கு பொருளுதவி

     ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி

     இலவசமாக மூதாதையர் திதி அறிந்து கூறுதல்

 

     மேலும் அன்றைய தினம் தானமாக வரும் உணவுப்பொருட்கள் பெரும்பங்கு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தரப்படும்.

 

புரோகிதருக்கு தரும் பணம் அவரின் பணிவிடைக்கு தரும் சம்பளம் (சம்பளம்)

அதை தர்மம், தானம் என தவறாக புரிந்துக்கொள்ளக்கூடாது!

தானமும், தர்மமும் சரியான நபருக்கு அடைவதே எமது எண்ணம்