Pages

Friday, April 25, 2014

வாக்குச்சாவடி முகவர் (பூத் ஏஜென்ட்) பணியில் கணணி அறிமுகம்

ஸ்ரீபெருமந்தூர் பாரளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர். இரா. மாசிலாமணி அவர்களின்  
வாக்குச்சாவடிமுகவராக செயல்பட்ட பா.ஜ.க சார்ந்த பாலு சரவணன் (தாம்பரம் 31 பிரிவில்) கல்யாண நகர் அரசுபள்ளியில் அமைந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவின் பொழுது கணணியை பயன்படுத்தினார். 

Tamil Nadu - Sripermanthur - Parliament Election 2014 Result


காகிதத்தில் எழுதி வாக்குப்பதிவுகள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்ட நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 
கணணியில் வாக்குப்பதிவு குறித்த விவரங்கள், வாக்குச்சாவடியின் செயல்பாடுகள் குறித்து எளிதில் ஆய்வுசெய்ய சிறப்பு மென்பொருள் பயன்படுத்தப்பட்டது
இதனால் வாக்குநிலவரம், விகிதாசாரம், செயல்பாடுகள், புள்ளிவிபரங்கள் உடனுக்குடன் அறியமுடிகிறது. தேவைப்படின் இணையத்தின் மூலம் பகிர்ந்துக்கொள்ளவும் முடியும். 
மேலும் இதனை வாக்காளர் அடையாள அட்டை தகவலுடன் இணைக்கும் பட்சத்தில் 
முகவர்களின் செயல்பாடு மிகவும் மேம்பாடு அடையும், 

இதனால் துரிதமாக வாக்குப்பதிவு செய்யவும்,  முறைகேடுகள் தடுக்க முடியும். குறிப்பாக அனைத்து தகவல்களையும் ஆவணப்படுத்தவும் தேர்தல் ஏஜன்டுகள் சிறப்பாக செயல்பட இயலும் என்பது சிறப்பான ஒன்றாகும்.